மின்சாரம் தாக்கிய சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற கார்!! திடீரென நேர்ந்த நெஞ்சை உறைய வைக்கும்  சம்பவம்!!

0
75
The car that took the electrocuted boy to the hospital!! A sudden heart-freezing incident!!
The car that took the electrocuted boy to the hospital!! A sudden heart-freezing incident!!

மின்சாரம் தாக்கிய சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற கார்!! திடீரென நேர்ந்த நெஞ்சை உறைய வைக்கும்  சம்பவம்!!

உத்திரப்பிரதேசத்தில் லாரி மீது வேகமாக வந்த கார் மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டு ஏழு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

உத்திரபிரதேசம் மாநிலம் காமசின் சாலையில் பஹாடியா டாய் பகுதியில் உள்ள கல்லு என்ற சிறுவனுக்கு மின்சாரம் தாக்கியது. இதையடுத்து அவனை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அவரது குடும்பத்தினர் அழைத்துச் சென்றனர். மின்சாரம் தாக்கியதால் மிகவும்  விரைவாக செல்ல வேண்டும் என்பதால் கார் ஓட்டுநர்  வேகமாக 130 கிலோ மீட்டர் வேகத்தில் காரை ஓட்டியுள்ளார்.

செல்லும் வழியில் சாலையின் ஓரமாக ஒரு லாரி நின்று கொண்டு இருந்தது. அதிக வேகத்தில் சென்றதால் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த கொடூர விபத்தில் காரில் பயணம் செய்த ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் மூன்று பேரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றனர். இந்த விபத்தில் கார் முற்றிலும் சேதமானது.

மேலும் படுகாயம் அடைந்த மூன்று பேரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தீவிர சிகிச்சை அளிக்கும் போது சிகிச்சை பலனின்றி இருவர் உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.