கார் தடுப்பு சுவரில் மோதி கோர விபத்து! சிறுவன் பலி ஐந்து பேர் படுகாயம்!

0
126
The car collided with the barrier and the accident! Boy killed, five injured!
The car collided with the barrier and the accident! Boy killed, five injured!

கார் தடுப்பு சுவரில் மோதி கோர விபத்து! சிறுவன் பலி ஐந்து பேர் படுகாயம்!

திருவள்ளூர் மாவட்டம் செம்பரம்பாக்கம் பட்டாராமன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவக்குமார்(40)இவருடைய மனைவி பார்வதி(30)இவர்களுடைய மகன் கவுசி(7).அதே பகுதியில் வசித்து வருபவர் சந்துரு,அவருடைய மனைவி தெய்வானை.இந்த இரண்டு குடும்பங்களும் உறவினர்கள் தான்.இரண்டு குடும்பங்களும் இணைந்து நேற்று முன்தினம் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு காரில் சென்றுகொண்டிருந்தனர்.

அவர்கள் செல்லும் காரை மணிகண்டன் என்ற டிரைவர் ஓட்டி சென்றார்.அதன் பிறகு அவர்கள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு வீடு திரும்பியுள்ளனர்.நேற்று காலை ஏழு மணி அளவில் மல்லூர் அருகே சேலம் நாமக்கல் நெடுஞ்சாலையில் கெஜ்ஜல்நாயக்கன்பட்டி பிரிவு பகுதியில் சென்று கொண்டிருந்தனர்.அப்போது அவர்களின் டிரைவர் மணிகண்டனிற்கு திடீரென மயக்கம் ஏற்பட்டு கார் எதிர்பாரதவிதமாக சாலை ஓரத்தில் இருந்த தடுப்பு சுவரில் மோதியது.

அந்த காரனது கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் கவிழ்ந்தது.இந்த விபத்தில் சிறுவன் கவுசி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.மேலும் சிவக்குமார் ,பார்வதி ,சந்துரு தெய்வானை மற்றும் டிரைவர் மணிகண்டன் ஆகியோர்  பலத்த காயம் அடைந்தனர்.மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மல்லூர் போலீசார்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வரைந்து வந்த போலீசார் காயம் அடைந்தவர்களை சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அதனையடுத்து உயிரிழந்த சிறுவனின் உடலை கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைதொடர்ந்து மல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.சிறுவன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
Parthipan K