உயிரை கையில் பிடித்து கொண்டு இறங்கிய பேருந்து பயணிகள்?பரபரப்பில் அப்பகுதி மக்கள்!..

0
70
The bus passengers got off holding their lives in their hands? The people of the area are in panic!..
The bus passengers got off holding their lives in their hands? The people of the area are in panic!..

உயிரை கையில் பிடித்து கொண்டு இறங்கிய பேருந்து பயணிகள்?பரபரப்பில் அப்பகுதி மக்கள்!..

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன் சத்திரம் மேம்பாலத்தில் அரசு பேருந்து ஒன்று வழக்கம் போல் சென்று கொண்டிருந்தது.ஓரமாக சென்ற பேருந்தில் மீது எதிரே வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியது.இந்த விபத்தில் மோட்டார்சைக்கிளில் வந்த மூன்று பெரும் தூக்கி வீசப்பட்டார்கள்.

அதில் ஒரு மாணவன் பள்ளி சென்ற மாணவன் ஆவார்.உடனடியாக பேருந்தில் உள்ள ஓட்டுனர் பேருந்தை நிறுத்தினார்.இருப்பினும் பள்ளி மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.பின் அவருடன் வந்த இரண்டு பேர் பலத்த படுகாயமடைந்தனர்.அவர்களை உடனடியாக அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.அதிவேகமாக மோட்டார்சைக்கிள் பேருந்தின் மீது மோதியதால் வாகனம் திடிரென்று தீபிடித்தது.இந்த தீ பேருந்து முழுக்க பற்றியது பிறகு முழுவதும் எரிய தொடங்கியது.இதனை கண்ட பயணிகள் அனைவரும் கதறிக்கொண்டு பேருந்திலிருந்து கீழே இறங்கினர்.

இதனால் பேருந்தில் இருந்த அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்து வந்தது.இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

author avatar
Parthipan K