தந்தைக்கு மகன்கள் செய்த கொடூரம்! போலீசார் வழக்கு பதிவு!

0
268
The brutality of the sons to the father! Police registered a case!
The brutality of the sons to the father! Police registered a case!

தந்தைக்கு மகன்கள் செய்த கொடூரம்! போலீசார் வழக்கு பதிவு!

ஈரோடு மாவட்டம் டி.என் பாளையம் ஜே.ஜே.நகரை சேர்ந்தவர் ஆண்டவர்.இவருடைய மனைவி வெண்ணிலா. இவர்களுக்கு பூமணி(27),விஷ்வன்(20) என இரண்டு மகன்கள் உள்ளனர்.இவர்கள் இருவரும் மது பழகத்திற்கு அடிமையாகியுள்ளனர். இவர்கள் இருவரும் அடிக்கடி பெற்றோரிடமும் ,அக்கம் பக்கத்தினரிடமும் தகராறில் ஈடுபடுவது வழக்கம்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் இருவரும் மதுபோதையில் பொது இடங்களில் நின்று கொண்டு தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர்.அதனை அறிந்த ஆண்டவர் சம்பவ இடத்திற்கு சென்று மகன்கள் இருவரையும் கண்டித்துள்ளார்.அதில் ஆத்திரம் அடைந்த மகன்கள் இருவரும் ஆண்டவரை தகாத வார்த்தைகளில் திட்டி கட்டையால் தாக்கியுள்ளனர். அதில் ஆண்டவர்க்கு   தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு டி..என்.பாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.அதனையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.மேலும் இந்த சம்பவம் குறித்து பங்களாப்புதூர் போலீசார்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அந்த தகவலின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பூமணி மற்றும் விஷ்வன் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.

author avatar
Parthipan K