ஒரே மாதத்தில் திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்த மணப்பெண்! கணவரிடம் முதற்கட்ட விசாரணை தொடக்கம்! 

0
116
The bride ended her married life in one month! The initial investigation of the husband began!
The bride ended her married life in one month! The initial investigation of the husband began!

ஒரே மாதத்தில் திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்த மணப்பெண்! கணவரிடம் முதற்கட்ட விசாரணை தொடக்கம்!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சி.எச்.பி காலனியை சேர்ந்தவர் அத்தியப்பன்.இவர் லாரி ஓட்டுநராக வேலை பார்த்து வருகின்றார்.இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர்.மூத்த மகளான வசுமதி என்பவர் என்ஜினீயரிங் முடித்துள்ளார்.இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் நல்லிப்பாளையம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மகன் வினோத் என்பவருக்கும் வசுமதிக்கு கடந்த அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வினோத்தின் தாயார் அமுதா மற்றும் தங்கை காவியா உட்பட நான்கு பேரும் என்னை வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்துவதாகவும் தகாத வார்த்தைகளால் திட்டியும் ,அடித்தும் துன்புறுத்துவதாக வசுமதி அவருடைய தந்தையிடம் கூறியுள்ளார்.

அதனை தொடர்ந்து அத்தியப்பன் சென்று அவருடைய மக்களை திருச்செங்கோட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.மேலும் மன வேதனையில் இருந்த வசுமதி கடந்த நவம்பர் 30 ஆம் தேதி அன்று அவருடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். அதனை கண்ட அவருடைய பெற்றோர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

மேலும் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த வசுமதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இது குறித்து அத்தியப்பன் திருச்செங்கோடு ரூரல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் வசுமதி இறந்த செய்தியை கேட்ட வினோத் குடுத்பத்தினர் தலைமறைவு ஆனதால் போலீசார் அவர்களை வலை வீச்சை தேடி வருகின்றனர். மேலும் சேலம் அரசு மருத்துவமனையில் வசுமதியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இறந்த வசுமதியின் உடல் மருத்துவமனையில் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்று மல்லசமுத்திரம் பேருந்து நிலையத்தில் வைத்து வசுமதியின் கணவர் வினோத்தை திருச்செங்கோடு நகர போலீசார் கைது செய்தனர்.அவரிடம் முதற்கட்ட விசாரணையை தொடங்கி உள்ளனர்.

author avatar
Parthipan K