ஒற்றை தலைமையை ஏற்காவிட்டால் வெடிகுண்டு வெடிக்கும்! மர்ம நபரால் அதிமுக அரசியலில் பெரும் பதட்டம்?

0
97

ஒற்றை தலைமையை ஏற்காவிட்டால் வெடிகுண்டு வெடிக்கும்! மர்ம நபரால் அதிமுக அரசியலில் பெரும் பதட்டம்?

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பான சூழலை எட்டியுள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமியும் எட்டாவது நாளாக தனித்தனியே ஆலோசனை கூட்டம் மேற்கொண்டனர். மேலும் பசுமை வழிச்சாலையில் குவிந்துள்ள அவர்களது தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு மிகுந்த ஆதரவாக உள்ளனர்.

ஒற்றை தலைமைக்கு ஓ.பன்னீர்செல்வம் தான் வரவேண்டும் என்று பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் ஒரு பக்கம் முழக்கமிட்டு கொண்டிருக்கின்றனர். மற்றொரு பக்கம் எடப்பாடி பழனிசாமி தான் வரவேண்டுமென்று அவரது ஆதரவாளர்களும் ஆதரவினை வெளிப்படுத்தி வந்தனர்.இருவர்களின் ஆதரவாளர்களும் ஒருவருக்கொருவர் நேருக்கு நேராக நின்று ஆதங்கத்துடன் முழக்கமிட்டனர்.

இவை ஒரு பக்கம் இருக்கும் நிலையில் மற்றொரு பக்கம் வெடிகுண்டு மிரட்டல் ஒன்று வந்துள்ளது. அதில் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓ பன்னீர்செல்வம் ஏற்காவிட்டால் சேலம் மற்றும் தாம்பரம் ரயில் நிலையங்களில் குண்டு வெடிக்கும் என்று அடையாளம் தெரியாத நபர் சொல்லப்பட்டதாக தெரியவந்தது.

கட்சியினரிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் இப்போது பூகம்பமாக வெடித்துள்ளது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

சேலம் மற்றும் சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட அந்த அடையாளம் தெரியாத நபர் தொலைபேசி மூலம் அவர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து விட்டு தொலைபேசி அழைப்பை துண்டித்துள்ளார்.இதனால் அக்கட்சியினர் இடையே பதற்ற சூழ்நிலை நிலவி வருகிறது..

author avatar
Parthipan K