சிறந்த வீரர்கள் சிறந்த தொடரை தேர்வு செய்வர்! இந்திய வீரரை புகழ்ந்த ஆஸ்திரேலிய வீரர்! 

0
163

சிறந்த வீரர்கள் சிறந்ததொடரை தேர்வு செய்வர்! இந்திய வீரரை புகழ்ந்த ஆஸ்திரேலிய வீரர்!

ஆஸ்திரேலியா அணி நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இதில் முதலாவது டெஸ்ட் நாளை நாக்பூரில் தொடங்க இருக்கிறது. இந்திய வீரர்களும் ஆஸ்திரேலியா அணி வீரர்களும் தொடர வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் கடும் பயிற்சி செய்து வருகின்றனர்.

இந்தத்தொடரை கைப்பற்றி இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு முன்னேற தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இரு அணிகளுக்கும் கடினமான விஷயம் சுழற் பந்துவீச்சு தான். இதை எந்த அணி சமாளிக்கின்றதோ அந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு சாதகமாகும். இந்த தொடரை யார் கைப்பற்றுவார்? யார் வெற்றி நாயகன் விருது பெறுவார் என்று ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

டி20, ஒருநாள் போட்டி என மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்பி விட்ட இந்திய அணியில் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த டெஸ்ட் போட்டியிலும் பழைய நிலைமைக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக எப்போதும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் கோலி இந்த ஆட்டத்திலும் திறம்பட செயல்படுவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இதையடுத்து விராட் கோலி குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆஸ்திரேலியா வீரர் மார்க்ஸ் ஸ்டோய்னிஸ் கூறுகையில்,

கிரிக்கெட் உலகில் கோலி ஒரு மிகப்பெரிய வீரர். அவருடைய தற்போதைய வயதிற்கும் கிரிக்கெட்டில் இருக்கும் நிலைமைக்கும் இந்த தொடரை சரியாக பயன்படுத்த வேண்டும் என அவர் நினைப்பார். கோலி போன்ற சிறந்த வீரர்கள் எப்போதும் சிறந்த தொடரையே தேர்வு செய்வார்கள்.

டி20 போட்டியில் அவரது சிறப்பான ஆட்டத்தை நாங்கள் பார்த்தோம். அவர் ரன் குவிக்க மிகுந்த பசியில் உள்ளார் என்பதற்கு இது ஒரு அறிகுறி. நிச்சயம் அவர் எங்களை பின்னுக்கு தள்ள கூடியவர். இந்த தொடரை வெல்ல வேண்டும் எனில் நாங்கள் அவரை சிறப்பாக கையாள வேண்டும். அவரை எதிர்கொள்வதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று அவர் அந்த நிகழ்ச்சியில் குறிப்பிட்டு இருந்தார்.