பால்கனியில் இருந்த குழந்தை! தாயின் கவன குறைவால் நிகழ்ந்த மரணம்!

0
87
The baby on the balcony! Death due to mother's carelessness!
The baby on the balcony! Death due to mother's carelessness!

பால்கனியில் இருந்த குழந்தை! தாயின் கவன குறைவால் நிகழ்ந்த மரணம்!

சென்னை மண்ணடியில், இப்ராஹிம் சாஹிப் 2-வது தெருவை சேர்ந்தவர் செல்வகனி. யாஸ்மின் என்பவரை திருமணம் செய்து தம்பதிகளாக அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வாழ்ந்து வருகின்றனர். மேலும் மூன்றாவது தளத்தில் வசித்து வருகின்றனர். இவர்கள் மூன்றாவது குழந்தை ஆபியா. அந்த குழந்தை நேற்று இரவு பால்கனியில் விளையாடிக் கொண்டிருந்தது. தாய் யாஸ்மினும் உடனே விளையாடியுள்ளார்.

பின் சிறிது நேரத்தில் சமையல் வேலைகளை கவனிப்பதற்காக தாய் சமையல் அறைக்குள் சென்று விட்டாள். ஆனால் மூத்த மகளிடம் குழந்தையை பார்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டு உள்ளே சென்றுள்ளார். அங்கே விளையாடிக்கொண்டிருந்த குழந்தையின் சகோதரியான  அந்த சிறுமியும் சிறிது நேரத்தில் விளையாட்டுத்தனமாக வீட்டிற்குள்ளே சென்று விட்டதாக கூறப்படுகிறது.

அந்த சமயத்தில் குழந்தை இரண்டடி உயரமுள்ள பால்கனி தடுப்பின் மீது மேலே ஏறியது அந்த நேரத்தில் எதிர்பாராதவிதமாக குழந்தையின் கால் தவறி அங்கிருந்து கீழே விழுந்ததாகவும் தகவல்கள் சொல்லப்படுகின்றன. நினைத்துப்பாருங்கள் மூன்றாவது மாடியில் இருந்து குழந்தை விழுந்தால் என்னவாகும் என்று.

அந்த குழந்தை விழுந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் ஓடிச்சென்று பார்த்தனர். அதற்குப் பின்தான் சமயலறையிலிருந்து தாய்க்கு குழந்தை கீழே விழுந்து விட்டது என தெரியவந்தது. இதனை அடுத்து தலையில் பலத்த காயமடைந்த குழந்தையை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து குழந்தைக்கு சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் இரண்டு மணி நேரத்தில் சிகிச்சை பலனின்றி குழந்தையின் உயிர் பிரிந்துவிட்டது. இதையடுத்து குழந்தையின் உடல் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் குறித்து ஏழு கிணறு காவல் நிலைய போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.