கவர்னர் வெளியிட்ட அறிவிப்பு! அதிர்ச்சி நிலையில் கட்சி!

0
117
The announcement made by the governor! Party in shock!
The announcement made by the governor! Party in shock!

கவர்னர் வெளியிட்ட அறிவிப்பு! அதிர்ச்சி நிலையில் கட்சி!

நேற்று கேரளா மாநிலத்தில் கொச்சியில் உள்நாட்டு பாதுகாப்பு கருத்தரவு கூட்டம் நடைபெற்றது. அதில் தமிழ்நாடு கவர்னர் ஆர் என் ரவி பங்கேற்றார்.  மேலும் அப்போது அந்த கருத்தரங்கில் பேசிய ஆர் எம் ரவி நாட்டின் ஒற்றை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு எதிராக பேசுபவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது மற்றும் ஆயுத குழுக்களுடன் கடந்த எட்டு ஆண்டுகளாக எந்த பேச்சு வார்த்தையும் நடத்தப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

மேலும் சரணடைய விரும்பும் குழுக்களுடன் மட்டுமே மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தும் எனவும் கூறினார். மேலும் மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடந்தது. அப்போது நாடு முழுவதும் அதிர்ச்சி நிலையில் காணப்பட்டது ஒரு சில பயங்கரவாதிகளால் நாடு அவமானப்படுத்தப்பட்டது எனவும் கூறினார் . மேலும் தாக்குதல் நடந்த ஒன்பது மாதங்களுக்குள் அப்போதைய இந்திய பிரதமர் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இரு நாடுகளுக்கும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டதாக கூறி கூட்டுறக்கையில் கையெழுத்திட்டனர்.

மேலும் பாகிஸ்தான் நட்பு நாடான அல்லது எதிரி நாடா என்ற கேள்விக்கு புல்வாமா தாக்குதலுக்கு பிறகு பல வின்வெளியில் நாம் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்தோம் பயங்கரவாத செயலை செய்தால் அதற்கான விலையை நீங்கள் கொடுக்க வேண்டும் என்பதுதான் அந்த செய்தி எனவும் கூறினார். மேலும் ஆயுதம் ஏந்துபவர்களுக்கு ஆயுதம் மூலமே பதில் கொடுக்கப்படும் எனவும் அந்த செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.

author avatar
Parthipan K