பரிதாபமாக தன் காதலனுடன் உயிரை விட்ட நடிகை ! சோகத்தில் திரையுலகம்!

0
69
The actress who sadly lost her life with her boyfriend! Screening in tragedy!
The actress who sadly lost her life with her boyfriend! Screening in tragedy!

பரிதாபமாக தன் காதலனுடன் உயிரை விட்ட நடிகை ! சோகத்தில் திரையுலகம்!

வளர்ந்து வரும் காலக்கட்டத்தில் பெண்கள் பலர் தங்கள் கனவுகளை நோக்கி செல்கின்றனர்.அவ்வாறு செல்லும் பெண்கள் தங்கள் குடும்ப வாழ்க்கை மற்றும் வெளி உலகில் நூறு சதவீதம் வெற்றியை காண்கின்றனர்.அந்த வரிசையில் இருப்பவர் தான் ஈஸ்வரி தேஷ்பாண்டே.இவருக்கு சிறு வயதில் இருந்தே நடிகை ஆக வேண்டும் என்பது ஆசை.இவரது நடிகை கனவானது தற்பொழுதுதான் படிப்படியாக நிறைவேறி வரத்தொடங்கியது.

அந்தவகையில் இவர் தற்போதுதான் தனது மராத்தி மற்றும் ஹிந்தி படபிடிப்புகளை முடித்து ஓய்வு பெற்றார்.தற்பொழுது அந்த படத்தின் படபிடிப்பு மட்டும் தான் முடிந்துள்ளது.மேற்கண்ட போஸ்ட்புரோடக்ஷன் பணிகள் நடைபெற்று தான் வருகிறது.அதனால் இரு படங்களும் இன்றும் வெளிவரவில்லை.இப்படங்கள் நாளடைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.இவர் படத்திற்குள் நடிக்க வருவதற்கு முன்னதிலிருந்தே சுப்பம் டெட்ஜ் என்பவரை காதலித்து வந்துள்ளார்.அதுமட்டுமின்றி இவர்கள் காதலை அவர்களது பெற்றோர்கள் சம்மதித்து ஏற்றுக்கொண்டனர்.

மேலும் இவர்கள் இருவருக்கும் அடுத்த மாதம் நிச்சயதார்த்தம் நடத்துவதற்கு இவர்களது பெற்றோர்கள் ஏற்பாடு செய்து வைத்திருந்தனர்.இந்நிலையில் இவர்கள் இருவரும் தங்களது சுற்றுலா நாட்களை கழிப்பதற்காக கோவா சென்றுள்ளனர்.அவர்கள் இருவரும் தங்கள் சுற்றுலா நாட்களை முடித்துவிட்டு நேற்று வீடு திரும்பியுள்ளனர்.வந்துகொண்டிருக்கும் போது கோவாவின் அர்போரா கிராமத்திற்கு அருகில் உள்ள சாலையில் அவர்கள் சென்று கொண்டிருந்த கார் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்தது.அவ்வாறு கட்டுப்பாட்டை இழந்ததில் கார் விபத்திற்குள்ளானது.மேலும் கார் அதிகளவு சேதமடைந்து பள்ளத்தில் விழுந்தது.அவ்வாறு விழுந்ததில் கார் சென்ட்ரல் லாக் ஆனது.அதனால் இருவராலும் காரை விட்டு வெளியே வர முடியவில்லை.அதனால் அவர்கள் காரினுள்ளே மூச்சு திணறி இறந்ததாக கூறப்படுகிறது.அனைத்து படிகளிலும் வெற்றியை கண்டுவந்த நிலையில் இந்த சம்பவம் அவர்களின் குடும்பத்தில் பெரும் அதிர்ச்சியாக உள்ளது.இவரது இழப்பிற்கு அவர் நடித்த படக்குழுவினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.