வீடியோ கேமுக்கு அடிமையானதன் காரணமாக வாலிபர் செய்த செயல்! இரவிலும் தூங்காமல் செய்ததன் விளைவு!

0
60
The action taken by the teenager due to his addiction to the video game! The effect of not sleeping at night!
The action taken by the teenager due to his addiction to the video game! The effect of not sleeping at night!

வீடியோ கேமுக்கு அடிமையானதன் காரணமாக வாலிபர் செய்த செயல்! இரவிலும் தூங்காமல் செய்ததன் விளைவு!

ஈரோடு பழைய பூந்துறை ரோடு பகுதியை சேர்ந்தவர் செல்லத்துரை. இவர் பெயிண்டராக வேலை செய்து வருகிறார். இவருக்கு மூன்று மகள்கள் மற்றும் இரண்டு மகன்களும் உள்ளனர். இதில் மூத்த மகனான ஸ்ரீராம் ஒன்பதாம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு தந்தைக்கு உதவியாக பெயிண்டர் வேலைக்கு சென்று வருகிறார். அவருக்கு வயது 22 ஆகும். கடந்த ஆறு மாதங்களாக அவர் செல்போனில் அதிகமாக வீடியோ கேம்களை விளையாடி கொண்டிருந்தார்.

அதில் காலப்போக்கில் அவர் அடிமையும் ஆகயுள்ளர். அதன் காரணமாக அவர் இரவில் தூங்காமல் நீண்டநேரம் விளையாடியுள்ளார். இதனால் அவரின் தந்தை இரவில் தூங்காமல் எதற்காக செல்போனைப் பார்த்துக் கொண்டே இருக்கிறாய் என்று கண்டித்து உள்ளார். அதன் காரணமாக ஸ்ரீ ராம் விபரீத முடிவை எடுத்துள்ளார். யார் என்ன சொன்னாலும் அவர் அதுபற்றி சட்டை பண்ணாமல் செல்போனில் விளையாடிக் கொண்டே இருந்திருக்கிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்தவர்கள் வெளியில் சென்றிருந்த நேரத்தில் ஸ்ரீராம் மட்டுமே வீட்டில் இருந்துள்ளார். அதன் பிறகு கடைக்கு சென்றிருந்த ஸ்ரீ ராமனின் தம்பி லட்சுமணன் வீட்டிற்கு வந்த போது, வீட்டின் கதவு உள்பக்கமாக தாளிடப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த தம்பி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார்.

அங்கு ஸ்ரீராம் தூக்கில் தொங்கி கொண்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். எனவே இது குறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வீடியோ கேம் விளையாட்டுக்கு அடிமையானதன் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் மேலும் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.