திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததன் காரணமாக மகள் செய்த செயல்! பதைபதைத்த பெற்றோர்!

0
74
The action taken by the daughter due to her refusal to marry! Pathetic parents!
The action taken by the daughter due to her refusal to marry! Pathetic parents!

திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததன் காரணமாக மகள் செய்த செயல்! பதைபதைத்த பெற்றோர்!

சித்ரதுர்கா மாவட்டம், செல்லககெரே தாலுகா பரசுராம் புராவை சேர்ந்தவர் திப்பே சாமி. 32 வயதான இவர் திருமணம் முடித்து, மனைவியுடன் இருக்கிறார். ஆனால் குழந்தைகள் இல்லை. இவர் பெயிண்டராக வேலை செய்து வருகிறார். இரியூர்  தாலுகா கூனிகேரே கிராமத்தில் வசிக்கும் உறவினர் வீட்டுக்கு இவர் அடிக்கடி வந்து செல்வது வழக்கம். அதே போல் சென்று வந்தபோது அந்த கிராமத்தில் இருந்த புஷ்பலதா என்ற 24 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. அவர்கள் 2 பேரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர். மேலும் பல்வேறு இடங்களுக்கு சென்று தங்களது காதலையும் வளர்த்துள்ளனர். திருமணம் செய்து கொள்வதாக கூறி புஷ்பலதா உல்லாசமாக இருந்ததும் தெரிய வந்தது. இந்த நிலையில் புஷ்பலதா பெற்றோரிடம் சென்று உங்களது மகளை எனக்குத் திருமணம் செய்து வையுங்கள் என்று கூறியுள்ளார்.

ஆனால் அவர் ஏற்கனவே திருமணமானவர் என்ற காரணத்தினால் புஷ்ப லதாவின் பெற்றோர் அவருக்கு திருமணம் செய்து வைக்க மறுத்து விட்டனர். மேலும் அவர்கள் மகளுக்கு வேறொரு உறவினர் வாலிபருடன் திருமணமும் நிச்சயம் செய்தனர். இந்த நிலையில் கடந்த 13ம் தேதி புஷ்பலதா வீட்டில் இருந்து மாயமானார். அதேபோல தெப்பேசாமியும் மாயமாகி இருந்தார். இதன் காரணமாக தனது மகளை கடத்தி சென்றுவிட்டார் என புஷ்ப லதாவின் தந்தை புறநகர் போலீசாரிடம் புகார் அளித்து இருந்தார்.

எனவே அவர்கள் இருவரையும் போலீசார் தேடிவந்தனர். இந்த நிலையில் நேற்று காலை கூனிகேரே கிராமத்தில் உள்ள கால்வாயில் திப்பே சாமியும், புஷ்பலதாவும்  பிணமாக மிதந்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் அங்கு சென்று இரண்டு பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் புஸ்பலதாவின் திருமணத்துக்கு பெற்றோர் மறுத்ததன் காரணமாக இவ்வாறு செய்து விட்டனர் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் குறித்து இரியூர் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.