காதலித்த காரணத்திற்காக சகோதரியின் தலையை வெட்டி அதனுடன் தம்பி செய்த செயல்! தாயும் சேர்ந்து உடந்தை!

0
78
The act of beheading a sister for the cause of falling in love with her brother! Mother is complicit!
The act of beheading a sister for the cause of falling in love with her brother! Mother is complicit!

காதலித்த காரணத்திற்காக சகோதரியின் தலையை வெட்டி அதனுடன் தம்பி செய்த செயல்! தாயும் சேர்ந்து உடந்தை!

தற்போதெல்லாம் காதல் திருமணம் செய்வது மிகவும் சகஜமான ஒரு சூழ்நிலைதான். ஏனென்றால் அனைவரது வீட்டிலும் அப்படி ஒரு நிகழ்வு நடந்து கொண்டே இருக்கின்றது. பிள்ளைகள் காதலில் விழுவதும், வெளியாட்களை காதலிப்பதும், காதலுக்காக வீட்டை விட்டு சென்று திருமணம் செய்வதும் இப்போது உள்ள வளர்ந்து வரும் காலகட்டத்தில் ஒரு தவறாக எங்கும் சொல்லப்படுவதில்லை.

அப்படியே முதலில் பெற்றோர் பிள்ளைகளிடம் கோபித்துக் கொண்டாலும், அதன் பிறகு வீட்டோடு சேர்த்து அவர்களை அரவணைத்துக் கொள்கிறார்கள். ஆனால் மராட்டிய மாநிலத்தில் உள்ள லட்கான் என்ற கிராமத்தில் காதல் திருமணம் செய்த செயலுக்காக 19 வயது சகோதரியை அவளது சொந்த 17 வயது தம்பி, தலையை துண்டித்து கொலை செய்துள்ளான்.

இந்த சம்பவம் அனைவரிடத்திலும் பெரும் சோக அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும் துண்டிக்கப்பட்ட தலை உடன் சிறுவனும், அவனது தாயும் செல்பி ஒன்றையும் எடுத்துள்ளனர். இது எப்படியோ போலீசாருக்கு தெரிய வரவே போலீசார் அந்த மொபைல் போனை கைப்பற்றி அதிலிருந்த செல்பியை நீக்கிவிட்டு, அதன் பின்னர் அதை தடயவியல் ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர்.

மேலும் அந்த சிறுவனையும் அவரது தாயாரையும் போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். அந்த சிறுவன் மராத்தி திரைப்படம் ஒன்றால் ஈர்கப்பட்டதன் காரணமாக இப்படி ஒரு கொலையை செய்ததாக போலீஸ் சூப்பிரண்டு நிமித் கோயல் தெரிவித்துள்ளார். கொலை செய்யப்பட்ட அந்த இளம்பெண் கடந்த ஜூன் மாதம் தான் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார்.

மேலும் தன்னுடைய காதலனான 20 வயது நபர் ஒருவரை திருமணம் செய்துள்ளார். அதன் பின்னர் தன்னுடைய கணவருடன் லட்கான் கிராமத்தில் நிம்மதியாக வாழ்ந்து வந்திருக்கிறார். இதற்கும் இவர்களது திருமணம் கலப்புத் திருமணம் கூட இல்லை. அப்படி இருந்தும் தன்னுடைய குடும்பத்திற்குப் அவப்பெயரை ஏற்படுத்தி விட்டார்கள் என்ற காரணத்திற்காக அவர்களை கொலை செய்ய அந்த பெண்ணின் தாயும், சிறுவனும், ஒரு சதி திட்டமிட்டுள்ளனர்.

அதன்படி அதற்காக அவர்கள் இருவரும் அந்தப் பெண்ணிடம் சமரசம் ஏற்பட்டு விட்டதாக கூறி நடித்து அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளனர். இந்நிலையில் இவர்களை நம்பிய அந்தப் பெண் அவர்களுக்காக சமையலறையில் டீ தயார் செய்து கொண்டிருக்கும்போது, பின்புறம் சென்ற சிறுவன் தன்னுடைய சகோதரியை அரிவாளால் வெட்டி தலையைத் துண்டித்து கொலை செய்துள்ளான்.

அதன் பிறகு அந்த கொடூர தாயும், மகனும் சேர்ந்து அந்த வெட்டப்பட்ட தலையுடன் செல்பி ஒன்றையும் எடுத்துள்ளனர். மேலும் அந்த சிறுவன் சகோதரியின் கணவனையும் கொலை செய்ய முயற்சி செய்துள்ளான். ஆனால் அவர் தப்பித்து ஓடி விட்டார். மேலும் இந்த வழக்கில் கொலை செய்யப்பட்ட இளம்பெண் கர்ப்பம் ஆக இருப்பதும் போலிசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.