மைனர் பெண்ணை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்ற ஆசாமி கைது கொடைக்கானலில் பரபரப்பு!

0
70

பதினோராம் வகுப்பு படித்து வரும் மாணவி காதல் வசனம் பேசி கோயம்புத்தூருக்கு அழைத்துச் சென்ற இளைஞரை போக்ஸோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

அண்மை காலமாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. காதலிப்பது போல ஏமாற்றி பல பெண்களை சீரழித்து பணத்திற்காக நடிப்பது, கணவரை பிரிந்து இருக்கும் பெண்கள், மற்றும் விதவை பெண்களை தேடிப்பிடித்து தகாத உறவில் ஈடுபடுவது காதலிக்க மறுத்தால் பெண்களை கொலை செய்து விடுவது போன்ற பல சம்பவங்கள் அடிக்கடி நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இவற்றை எல்லாம் தடுப்பதற்காக காவல் துறை சார்பாக அனேக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், இதுபோன்ற குற்றங்கள் புரிந்ததாக தெரியவில்லை.

அந்தவகையில், கொடைக்கானலில் பதினோராம் வகுப்பு பயின்று வரும் மாணவியை காதல் செய்து ஏமாற்றி அதன்பிறகு தலைமறைவாகி போன சம்பவம் நடந்திருக்கிறது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பாக்கியபுறத்தை சார்ந்த பதினோராம் வகுப்பு பயின்று வரும் மாணவியை காணவில்லை என்று அந்த மாணவியின் பெற்றோர்கள் கொடைக்கானல் காவல் நிலையத்தில் சென்ற 15-ஆம் தேதி புகார் அளித்து இருக்கிறார்கள். அந்த புகாரின் அடிப்படையிலே, அந்த மாணவியை மிகத் தீவிரமாக தேடும் வேலையில் காவல் துறையினர் ஈடுபட்டு இருந்தார்கள். அந்த சமயத்தில் பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவியும் காஞ்சிபுரத்தைச் சார்ந்த சாம்சங் என்ற 22 வயது இளைஞரும் காதலிப்பது தெரிய வந்திருக்கிறது.

அதுமட்டுமின்றி காதலர்கள் இருவரும் கோயம்புத்தூருக்கு போனது விசாரணையின்போது தெரிய வந்திருக்கிறது. இதனை தொடர்ந்து கொடைக்கானல் காவல்துறையினர் கோயம்புத்தூர் பகுதியில் இருக்கின்ற ஒரு விடுதியில் கடினமான தருணங்களை இருந்த அந்த இருவரையும் கொடைக்கானலுக்கு கொண்டு வந்து இருக்கிறார்கள். இதனையடுத்து 16 வயதே நிரம்பிய அந்த மாணவியை அழைத்து சென்ற இளைஞரை கொடைக்கானல் காவல்துறையினர் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள் அந்த மாணவி அவருடைய பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறார்.