பதற்றம்-பெட்ரோல் குண்டு வீச்சு!! கடலூர் மாவட்ட திமுக எம்எல்ஏ உயிர் தப்பினார்!!

0
37

பதற்றம்-பெட்ரோல் குண்டு வீச்சு!! கடலூர் மாவட்ட திமுக எம்எல்ஏ உயிர் தப்பினார்!!                        கடலூர் மாவட்ட திமுக எம்எல்ஏ ஐயப்பன் திமுக நிர்வாகி மகள் மஞ்சள் நீராட்டு விழாவிற்கு பங்கேற்பதற்க்காக சென்ற போது இந்த பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.            நல்லாத்தூரில் திமுக நிர்வாகி இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கடலூர் மாவட்ட திமுக எம்எல்ஏ ஐயப்பன் மற்றும் திமுக உறுப்பினர்கள் பலர் மண்டபத்தில் கூடியிருந்துள்ளனர்.    அச்சமயத்தில் தான் மர்ம நபர்களால் குண்டு வீசப்பட்டுள்ளது. நிகழ்ச்சி நடைபெற்ற மண்டபத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.                                                                      பெட்ரோல் குண்டு வீசப்பட்ட பொழுது அங்கு கூடி இருந்த மக்களும் திமுக MLA, திமுக உறுப்பினர்களும் அனைவரும் மிகவும் பதற்றம் அடைந்துள்ளனர். ஆனால் யாருக்கும் எந்தவித உயிர் சேதமும் நடைபெறவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் நேரில் சென்று விசாரண நடத்த சென்ற போது  அங்கிருந்து தப்பிக்க முயன்ற 2 மர்ம நபர்களை போலீசார் பிடிக்க முயன்ற போது தப்பி ஓடினர். அப்பொழுது ஓட முயன்றவர்களை துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர். இதனால் அவர்களது காலில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். கழகத் திமுக சட்டமன்ற உறுப்பினர் எம் எல் ஏ ஐயப்பன் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ள இச்சம்பவம் பெரும் பதற்றத்தை, பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.