கீழடியில் நடந்துவரும் அகழ்வாராய்ச்சி பணிகள் தற்காலிகமாக தளர்வு:?

0
93

கீழடியில் நடந்துவரும் அகழ்வாராய்ச்சி பணிகள் தற்காலிகமாக தளர்வு:?

கனமழை காரணமாக கீழடியில் நடந்து வரும் அகழ்வாராய்ச்சி பணிகளை சிறிது காலம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் கீழடியில் நடந்துவரும் 6- ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் மார்ச் மாதம் முதல் நடைபெற்று வருகிறது. கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சி பணிகள் இந்த மாதத்துடன் நிறைவு பெற இருக்கிறது.அகல்வாராய்ச்சி பணிகளில் ஆவணப்படுத்தும் பணிகள் தற்போது இறுதிக் கட்டமாக நடைபெற்று வருகின்றன.

கடந்த 10 நாட்களாக தொடர் கனமழையால் ஆறாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அகழாய்வு பணிகள் நடந்து வந்த நிலையில், மழையின் காரணமாக அகழாய்வுப் பணிகள் பகல் 12 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை மட்டுமே நடைபெறுகிறது.

இருப்பினும் திட்டமிட்டபடி இம்மாதத்தில் அகலாய்வு பணிகள் முடிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

author avatar
Parthipan K