தெலுங்கானா மாநில ஆளுநராக பதவியேற்ற தமிழிசை சௌந்தராஜன் ஆரம்பித்த சர்ச்சை! அலறும் அரசியல் கட்சிகள்

0
67
Tamilisai Soundarajan-News4 Tamil Latest Online Tamil News Channel
Tamilisai Soundarajan-News4 Tamil Latest Online Tamil News Channel

தெலுங்கானா மாநில ஆளுநராக பதவியேற்ற தமிழிசை சௌந்தராஜன் ஆரம்பித்த சர்ச்சை! அலறும் அரசியல் கட்சிகள்

ஐதராபாத்: தமிழக பாஜக தலைவராக பதவி வகித்த தமிழிசை சௌந்தராஜன் சமீபத்தில் தெலுங்கானா மாநில கவர்னராக பதவியேற்றுள்ளார். தமிழக பா.ஜ. முன்னாள் தலைவரான தமிழிசை சவுந்தரராஜன் தற்போது தெலுங்கானா மாநில ஆளுநராக பதவியேற்ற பின் அம்மாநில பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்க முடிவு செய்துள்ளார். இது ஆளும் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி அரசுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி அரசு தலைவரான தமிழிசை சவுந்தரராஜன் கவர்னராக பதவியேற்றார். 

ஐதராபாத்: தமிழக பாஜக தலைவராக பதவி வகித்த தமிழிசை சௌந்தராஜன் சமீபத்தில் தெலுங்கானா மாநில கவர்னராக பதவியேற்றுள்ளார். தமிழக பா.ஜ. முன்னாள் தலைவரான தமிழிசை சவுந்தரராஜன் தற்போது தெலுங்கானா மாநில ஆளுநராக பதவியேற்ற பின் அம்மாநில பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்க முடிவு செய்துள்ளார். இது ஆளும் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி அரசுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி அரசு ஆட்சி செய்து வருகிறது.தமிழக பாஜக தலைவரான தமிழிசை சவுந்தரராஜன் தற்போது அங்கு கவர்னராக பதவி வகித்து வருகிறார். 

இந்நிலையில் தமிழிசை சௌந்தராஜன் பொது மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்க முடிவு செய்துள்ளார். இம்மாநிலத்தைச் சேர்ந்த மஜ்லிஸ் பச்சாவ் தெஹ்ரிக் அமைப்பின் தலைவர் அஜ்மத் உல்லாஹ் கான் சமூக வலைதளத்தில் ‘மக்களை சந்தித்து குறைகளை கேட்பீர்களா’ என சமீபத்தில் கேட்டிருந்தார். அதற்கு அவர் அளித்த பதிலில்’மக்களை சந்திக்க ஏற்கனவே திட்டமிட்டு உள்ளேன்’ என தமிழிசை சௌந்தராஜன் கூறி உள்ளார். இது ஆளும் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி அரசுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

”கவர்னர் பதவி என்பது அரசியல் சாசனப் பதவி. மற்ற மாநிலங்களிலும் கவர்னர்கள் இதுபோல மக்கள் குறைகளை கேட்டால் சட்ட விதிகள் அனுமதி அளித்தால் அவர் மக்களை சந்திப்பதில் எந்தவித ஆட்சேபனையும் இல்லை” என இது குறித்து தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி செய்தித் தொடர்பாளரும் சட்டசபை கொறடாவுமான ராஜேஸ்வர் ரெட்டி கூறியுள்ளார்.மேலும் இது குறித்து கட்சியின் மூத்த தலைவர்கள் கூறியதாவது: அவர் ஒன்றும் மக்கள் பிரதிநிதி இல்லையே. எப்படி மக்களை சந்தித்து குறைகளை கேட்கலாம். அதற்கு தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு உள்ளது. தன் பதவிக்குரிய எல்லையை மீறாமல் இருப்பார் என எதிர்பார்க்கிறோம் என்றும் அவர்கள் கூறினர்.

புதுச்சேரி ஆளுநராக கிரண்பேடி கிளப்பியது போல தெலுங்கானா மாநிலத்தில் தமிழிசை சௌந்தராஜனும் சர்ச்சையை கிளப்பி விட்டிருக்கிறார்.இவர் என்ன செய்வாரோ என ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் கலக்கத்தில் உள்ளன.