போர்வை வேண்டுமென வர சொல்லி இப்படி நிர்வாணமாக படம் பிடிக்கிறிங்களே! பெண்ணுடன் நிர்வாண புகைப்படம்!

0
99

போர்வை வேண்டும் என பெண் ஒருவர் வர சொல்லி நிர்வாணமாக படம் எடுத்து மிரட்டி 3 லட்சம் பணம் கேட்ட திருட்டு கும்பல். இந்த சம்பவம் திருப்பூர் மாவட்டத்தில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் என்ற பகுதியில் வசித்து வருபவர் நாட்ராயன் வயது 56. இவர் சொந்தமாக விசைத்தறி வைத்து போர்வை உற்பத்தி செய்து வருகிறார்.

இந்நிலையில் இவரது செல்போனிற்கு புது எண்ணிலிருந்து அழைப்பு வந்துள்ளது. அதில் பெண் ஒருவர் பேசியுள்ளார். தன் பெயர் வெண்ணிலா என்றும் போர்வை அதிக அளவில் தேவைப்படுகிறது என்று கூறி ஆண்டிபாளையும் பகுதிக்கு வர சொல்லி இருக்கிறார்.

நாட்ராயனும் பெரிய அளவில் ஆர்டர் கிடைக்க போகும் சந்தோசத்தில் கிளம்பியுள்ளார்.

அதன்படி நாட்ராயனும் உறவினர் ஒருவரோடு வெண்ணிலா குறிப்பிட்ட இடத்திற்கு நாட்ராயன் சென்றுள்ளார். அங்கு அவர்கள் சென்றப்போது அந்த இடத்தில் வேறு யாரும் இல்லை. திடீரென்று பதுங்கி இருந்த கும்பல் இருவரையும் மடக்கி பிடித்து உள்ளனர்.

உடனே அவர்களது இருவரின் ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கியுள்ளனர். இருவரும் செய்வதறியாது திகைத்து நின்றுள்ளனர்.

உடனே அந்த கும்பலில் இருந்த பெண்ணோடு நிர்வாணமாக புகைப்படம் எடுத்துள்ளனர். போர்வை வேண்டும் என்று கூறி இப்படி பண்றீங்களே என்று கதறியுள்ளனர்.

பின்னர் அந்த புகைப்படத்தை காட்டி அக்கும்பல் ரூ. 3 லட்சம் பணம் தரவேண்டும் என இருவரையும் மிரட்டியுள்ளனர். மேலும் நாட்ராயன் அவருடைய செல்போன், அணிந்திருந்த ஒன்றரை பவுன் நகை, , கையில் இருந்த ரூ.3000 ரொக்கம் என அனைத்தையும் பிடிங்கி கொண்டு அனுப்பியுள்ளனர்.

மறுபடியும் நாட்ராயனுக்கு தொடர்பு கொண்டு பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த நாட்ராயன் போலீசில் புகார் அளித்துள்ளார்.

விசாரணை செய்த போலீசார் அவினாசி சேர்ந்த கவிதா என்கிற வெண்ணிலா, தூத்துக்குடியை சேர்ந்த இசக்கிபாண்டி , நெல்லையைச் சேர்ந்த இசக்கிமுத்து, ஜெபராஜ், சின்னதுரை ஆகியோரை போலீசார் கைது செய்து செய்தனர்.

மேலும் அவர்களிடமிருந்த கார், நகை, அறிவாள் என அனைத்தையும் கைப்பற்றினர்.

 

author avatar
Kowsalya