இந்த நேரத்தில் ஆசிரியர்கள் வாட்ஸ் அப் பயன்படுத்த கூடாது! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு நடப்பு கல்வியாண்டில் தான் மாணவர்கள் பொது தேர்வு எழுதவுள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆன்லைன் மூலமாகவே பாடங்கள் நடத்தப்பட்டது. அதன் காரணமாக மாணவர்களுக்கு கற்றல் திறன் குறைந்தது என ஆசிரியர்கள் வருத்தம் தெரிவித்து வந்தனர். அதனால் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டது.
ஆனால் இந்த முறை மாணவர்களுக்கு அதிகளவு விடுமுறை வழங்கப்பட்டது. தீபாவளி பண்டிகை,கார்த்திகை தீப திருநாள் ,கிருஸ்துமஸ்,மாண்டஸ் புயல்,பொங்கல் பண்டிகை என அதிகளவு விடுமுறை வந்துவிட்டது. இந்நிலையில் அடுத்த மாதம் 13 ஆம் தேதி பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ மாணவர்களுக்கு பொது தேர்வு நடைபெறும் என தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அவர்களுக்கு இந்த மாதம் இறுதியில் செய்முறை தேர்வு நடைபெற உள்ளது. அதற்காக மாணவர்கள் தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த உத்தரவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள பத்து மற்றும் பிளஸ் டூ மாணவர்களுக்கான பொது தேர்வில் பணியாற்றும் ஆசிரியர்கள் தேர்வு நேரத்தில் வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்வு நேரத்தில் வினாத்தாள் சமூக வலைத்தளத்தில் லீக் ஆகாமல் இருக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.