இரும்பு ஸ்கேலால் அடித்த ஆசிரியர்: பார்வை பறிபோய் பரிதாப நிலையில் மாணவர், சென்னையில் பரபரப்பு

0
101

ஆசிரியர்கள் சிலர் மாணவர்களை கண்மூடித்தனமாக அடிப்பதால் மாணவர்களுக்கு உயிரிழப்பு உட்பட பல விபரீதங்கள் ஏற்பட்டு வருவது குறித்த செய்திகள் அவ்வப்போது நாடு முழுவதும் வெளிவந்து கொண்டிருக்கின்றன

இந்த நிலையில் சென்னை அரசு பள்ளியில் இரும்பு ஸ்கேலால் மாணவர் ஒருவரை பின்மண்டையில் ஆசிரியர் தாக்கியதாக தெரிகிறது. இதனை அடுத்து மயக்கமடைந்த அந்த மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்

இந்த நிலையில் மருத்துவர்கள் தெரிவித்த தகவலின்படி இரும்பு ஸ்கேலால் அடிபட்ட மாணவரின் பார்வை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மாணவரின் பெற்றோர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். மாணவனை கண்மூடித்தனமாக அடித்தஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவனின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது குறித்து போலீசார் விசாரணை செய்து தகுந்த நடவடிக்கை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
CineDesk