தமிழகத்தில் வருகிறது புதிய ஐபோன் உதிரிபாக தொழிற்சாலை! 45000 பெண் பணியாளர்களை சேர்க்கும் நிறுவனம்!

0
150

டாட்டா குழுமம் தென்னிந்தியாவில் இருக்கின்ற iphone உதிரி பாகங்களை தயாரிக்கும் தன்னுடைய எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில் ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது apple incயில் இருந்து அதிக வணிகத்தை ஈட்டும் முயற்சியின் ஒரு பகுதியாக இதை செய்யவிருக்கிறது.

நிறுவனத்தின் புதிய உற்பத்தி கோடுகளின் படி தமிழ்நாட்டின் தொழில் நகரமான ஓசூரில் உள்ள டாடா குடும்பத்திற்கு சொந்தமான ஆலையில் 18 24 மாதங்களுக்குள் 45 ஆயிரம் பெண் தொழிலாளர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்று நிர்வாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஐபோன் ஹவுசிங்ஸ் அசம்பல் செய்யும் போன் கேஸ்கள் உதிரி பாகங்களை உற்பத்தி செய்யும் ஓசூர் தொழிற்சாலை தற்போது சுமார் 10,000 தொழிலாளர்களைக் கொண்டு இயங்கி வருகிறது. அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் ஓசூர் ஆலை செப்டம்பர் மாதத்தில் சுமார் 5,000 பெண்களை பணியமத்தியது இதில் வட மாநிலத்தைச் சார்ந்த பழங்குடியின சமூகத்தை சார்ந்தவர்களும் அடங்குவார்கள்.

ஓசூர் தொழிற்சாலையில் பெண்களின் ஒட்டுமொத்த சம்பளம் 16 ஆயிரம் ரூபாய் ஆகும். இது இந்திய தொழில்துறை தொழிலாளர்களின் சராசரியை விட சற்றேற குறைய 40 சதவீதம் அதிகம் தொழிலாளர்களுக்கு வளாகத்திற்குள் இலவசமாக உணவு மற்றும் தங்கும் இடம் வழங்கப்படுகிறது. மேலும் ஊழியர்களுக்கு டாட்டா தொழில் சார்ந்த மேம்பட்ட பயிற்சி மற்றும் கல்வித்தவற்றை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஆப்பிளின் முக்கிய உற்பத்தி பங்குதாரரான டெக்னாலஜி குரூப் அதன் முக்கிய சீன ஆலை நோய் தொற்று பரவலால் பாதிக்கப்பட்டதிலிருந்து இன்னும் முழுமையாக மீலாத நிலையில் விழா கால விற்பனையில் குறைபாடு வந்து விடுமோ என்று அஞ்சுகிறது.

ஆகவே சீனாவை கடந்து இந்தியாவில் ஐபோன் பாகங்களை தயாரிப்பது அதிகரித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் நிதி ஊக்கத்திட்டதால் ஊக்கப்படுத்தப்பட்ட திட்டத்தால் இது மேலும் ஊக்கப்படுத்தப்படுகிறது. இதனால் தெற்காசிய நாட்டில் இருந்து ஐ போன் ஏற்றுமதியை அதிகரிக்க உதவியாக இருக்கிறது.

தனித்தனியாக இந்தியாவில் ஐபோன்களை அசெம்பிள் செய்ய விரும்பும் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி கூட்டு முயற்சியை நிறுவ லிஸ்டனுடன் டாட்டா குழுமம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதனை பயன்படுத்தி அவர்களுடைய தமிழக தொழிற்சாலையில் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.