திறக்கப்படும் டாஸ்மாக்! மகிழ்ச்சியில் குடிமகன்கள்!

0
161

இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் நோய் தொற்று பாதிப்பு பரவிவருகிறது இதனைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.மத்திய மாநில அரசுகளின் தீவிர நடவடிக்கையின் காரணமாக, இந்த நோய் தொற்றிக் முதல் அலை இந்தியாவில் முடிவுக்கு வந்தது. என சற்று நிம்மதி அடைந்த சமயத்தில் மீண்டும் அதிர்ச்சி காத்திருந்தது.

அதாவது இந்த நோய்த்தொற்றின் இரண்டாவது அலை தற்சமயம் இந்தியாவில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்த நோய் தொற்றின் இரண்டாவது அலை நோய்த்தொற்றின் முதல் அறையை விடவும் மிக மோசமாக இருப்பதால் அதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் மிக தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், இந்த நோய் தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அதன் ஒரு பகுதியாக கடந்த மாதம் 24-ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல் படுத்தியது. இதனை தொடர்ந்து ஜூன் மாதம் 7ஆம் தேதி வரையில் இந்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. அதன் பின்னர் அடுத்தடுத்து நோய் தொற்று பாதிப்பு அதிகரித்து வந்ததை தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில், ஜூன் மாதம் 7ஆம் தேதி வரையில் இந்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. அதன் பின்னர் இந்த ஊரடங்கு போடப்பட்டு அதன் பலனாக நோய் தொற்று பாதிப்பு சற்று குறைந்து வருவதாக சொல்கிறார்கள்.

இப்படியான சூழ்நிலையில், ஜூன் மாதம் 14 ஆம் தேதியுடன் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவடைய இருக்கின்றது. இந்தநிலையில் ஊரடங்கை இன்னும் நீட்டிப்பது மற்றும் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நேற்றைய தினம் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான முக்கிய அறிவிப்பு நாளையதினம் வெளியாகலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், நோய்த்தொற்று பரவல் குறைவாக இருக்கின்ற மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் போன்றவற்றை திறப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.