நேற்று மட்டும் டாஸ்மாக் விற்பனை எத்தனை கோடி தெரியுமா? விபரங்கள் உள்ளே!!

0
63

மே 7-ஆம் தேதி தமிழகத்தில் அரசு உத்தரவின் படி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது உயர் நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து மே 8 ஆம் தேதி மதுக்கடைகள் மீண்டும் மூடப்பட்டது.

உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின் படி தமிழக அரசு சென்னை திருவள்ளூர் மாவட்டம் தவிர தமிழகத்தில் அணைத்து பகுதியிலும் மதுக்கடைகள் நேற்று திறக்கப்பட்டது. மதுபிரியர்கள் நேற்று நீண்ட வரிசையில் நின்று மதுபானங்களை வாங்கியுள்ளனர். மதுபானங்கள் வாங்க நாள் ஒன்றிற்கு 500 டோக்கன் வீதம் கொடுக்கப்பட்டது. குறிப்பாக கடலூரில் 1 மணிக்கே 500 டோக்கன்கள் முடிந்து வீட்டதாக தகவல்கள் வெளியானது.

தமிழகத்தில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதால் நேற்று மட்டும் 163 கோடிக்கு மது விற்பனை ஆகி உள்ளது. மதுரை மண்டலத்தில் 44.7 கோடியும், சேலம் மண்டலத்தில் 41.07 கோடியும், திருச்சியில் 40.5 கோடியும், கோவையில் 33.05 கோடிக்கும் மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

author avatar
Parthipan K