புத்தாண்டில் மதுபான பிரியர்களுக்கு அதிர்ச்சி?

0
66

தமிழகத்தில் எலைட் மதுபான கடைகளில் உயர்ரக மதுபாட்டில் விலை 2500 வரை உயிர்த்த பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது . இந்த விலை உயர்வு புத்தாண்டு நாளான ஜனவரி 1 முதல் அமலுக்கு வருவதாக டாஸ்மாக் அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

டாஸ்மாக்கின் கீழ் 4,700 டாஸ்மாக் கடைகள் மாநிலம் முழுவதும் இயங்கி வருகின்றன. அதில் உயர்ரக மற்றும் வெளிநாட்டு மது பானங்கள் விற்கப்படுகின்றன ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒன்று முதல் 8க்கும் மேற்பட்ட எலைட் மதுபான கடைகள் தோராயமாக இருக்கும்.

இந்நிலையில், எலைட் மதுபான கடைகளில் விற்பனை செய்யப்படும் உயர்ரக மதுபாட்டில் விலையை உயர்த்தி டாஸ்மாக் நிர்வாக மேலாண் இயக்குநர் அனைத்து மாவட்ட டாஸ்மாக் மேலாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது: 1,280க்கு விற்பனை செய்யப்பட்ட 750 மில்லி ரெட் ஒயின் 1,520 விற்பனை செய்யப்படும் என்றும், 1,490க்கு விற்பனை செய்யப்பட்ட 750 மில்லி ஒயின் 1,550விலை உயர்வு இருக்கும் என்றும், 1,420க்கு விற்பனை செய்யப்பட்ட 750 மில்லி ஒயிட் ஒயின் 1,560க்கும், 1,370க்கு விற்பனை செய்யப்பட்ட 750 மில்லி ரெட் ஒயின் 1,570வரை விலை உயர்வு இருக்கும் என்றும் , 1,610க்கு விற்பனை செய்யப்பட்ட 750 மில்லி ஒயிட் ஒயின் 1,870க்கு விற்பனை செய்யப்படும் என தெரிவிக்க பட்டுள்ளது , 1,750க்கு விற்பனை செய்யப்பட்ட 750 மில்லி ரெட் ஒயின் 2,020க்கும், 5,300க்கு விற்பனை செய்யப்பட்ட 700 மில்லி பிராந்தி 7,800க்கும், 240க்கு விற்பனை செய்யப்பட்ட 330 மில்லி உயர்ரக பீர் 290க்கும் விற்பனை செய்ய வேண்டும். இதனால் மது பானங்களின் விலை 50 முதல் 2500 வரை உயர்த்த பட்டுள்ளது இந்த விலை உயர்வு ஜனவரி 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட வேண்டும். என தகவல் கிடைத்துள்ளது இது மதுபான பிரியர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
CineDesk