சொத்து கணக்கு விபரங்களை அரசு ஆசிரியர்கள் பதிவிட வேண்டும்! பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு

0
110
school_education-News4 Tamil Online Tamil News
school_education-News4 Tamil Online Tamil News

சொத்து கணக்கு விபரங்களை அரசு ஆசிரியர்கள் பதிவிட வேண்டும்! பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு

தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஆசிரியர்கள் தங்களது சொத்து விவரங்களை பதிவிட பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மேலும் பயோமெட்ரிக் வருகைப்பதிவை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்றும் முதன்மை கல்வி அலுவலர் மாவட்ட கல்வி அலுவலர்கள் வட்டார கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஆசிரியர்கள் தங்களது ஊதியம் போதவில்லை என்று சென்ற ஆண்டு போராட்டம் நடத்தினார்கள். சிறப்பாக தமிழக அரசு போராட்டத்தை கையாண்ட விதம் தமிழக மக்களின் பாராட்டுக்கு உள்ளானது. இந்த கோரிக்கை நியாயம் இல்லை என்று தமிழக அரசு தெரிவித்தது. அதிகமாக ஊதியத்தை அரசு ஆசிரியர்களுக்கு வழங்கியும் அவர்களின் முதிர்ச்சியை கருத்தில் கொண்டும் ஊதியம் மிக அதிகமாக வழங்கப்படுகின்றது.

மேலும் எந்த ஒரு துறைக்கும் இல்லாத விடுமுறையை ஆசிரியர்கள் அனுபவித்து வருகின்றனர், இப்படி தமிழக அரசு பல சலுகைகளை அரசு ஆசிரியர்களுக்கு வழங்கி வருகிறது. ஆனால் இது போதவில்லை என்று மேலும் மேலும் ஊதியம் எங்களுக்கு அதிகப்படியாக வழங்க வேண்டுமென்று ஜாக்டோ-ஜியோ போன்றன ஆசிரிய அமைப்புகள் போராட்டத்தை ஆசிரியர்களிடம் தூண்டிவிட்டு கொண்டு இருக்கின்றன, இதன்காரணமாக அரசின் கடும் கோபத்திற்கு உள்ளாகிறார்கள் அரசு ஆசிரியர்கள்.

இதனால் ஆசிரியர் தகுதித் தேர்வை மிகக்கடுமையாக அமைத்தது, இதில் தேர்ச்சி பெறுவது அவ்வளவு சுலபமான காரியமல்ல.

இது ஒருபுறமிருக்க ஆசிரியர்களின் சொத்து கணக்கு விபரங்களை பணிப் பதிவேட்டில் முறையாக பராமரித்து வர வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி அரசு ஆசிரியர்கள் தங்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் விவரங்களை பணிப் பதிவேட்டில் பதிவிட வேண்டும். இதனை முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், வட்டார கல்வி அலுவலர் ஆகியோர்கள் ஆய்வு செய்து வரவேண்டும்.

சொத்துக்கணக்கு விபரங்களை சரியாக பதிவிடாமல் தவறாக இருந்தால் ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக தெரிவித்துள்ளது, மேலும் பயோமெட்ரிக் வருகைப்பதிவு தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்றுஅனைத்து அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள அரசு ஆசிரியர்கள் கடும் எரிச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். பொது மக்களும் இந்த நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்த வண்ணம் வருகின்றனர்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

author avatar
Parthipan K