தமிழிசை சவுந்தரராஜன் உறவினர் தூக்கிட்டு தற்கொலை: திடுக்கிடும் தகவல்

0
85

தமிழிசை சவுந்தரராஜன் உறவினர் தூக்கிட்டு தற்கொலை: திடுக்கிடும் தகவல்

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தெலுங்கானா ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார் என்பது தெரிந்ததே. அதன் பின்னர் இன்னும் தமிழக பாஜகவிற்கு தலைவர் பதவியை நிரப்பப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களின் நெருங்கிய உறவினர் ஒருவர் திடீரென கோவையில் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தமிழிசை சௌந்தரராஜன் அவர்களின் மருமகளுடன் பிறந்த சகோதரர் சண்முகநாதன். 25 வயது வாலிபரான இவர் தனது தந்தையிடம் கார் வாங்கி கொடுக்கும்படி கேட்டதாக தெரிகிறது. ஆனால் இப்போதைக்கு கார் வாங்கும் நிலை இல்லை என்றும் இன்னும் சில மாதங்கள் ஆகட்டும் என்று பெற்றோர் கூறியதாக தெரிகிறது

இதனால் ஆத்திரத்தில் சண்முகநாதன் தன்னுடைய அறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் உறவினர் ஒருவர் திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

author avatar
CineDesk