தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு! பள்ளி மற்றும் கல்லூரிகள் இந்த தினத்தில் வழக்கம் போல் செயல்படும்!

0
109
Tamil Nadu government announcement! Schools and colleges will function as usual on this day!
Tamil Nadu government announcement! Schools and colleges will function as usual on this day!

தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு! பள்ளி மற்றும் கல்லூரிகள் இந்த தினத்தில் வழக்கம் போல் செயல்படும்!

கடந்த மாதம் 24 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது.அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் விடுதியில் தங்கி படித்த மாணவர்கள்,பணியாளர்கள் என அனைவரும் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் விடப்பட்டது.அதனையடுத்து தீபாவளியின் அடுத்த நாளாக 25தேதி அன்றும் விடுமுறை அளிக்கப்பட்டது.

அந்த விடுமுறை பண்டிகையை கொண்டாட அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு சென்றவர்களுக்கு ஏதுவாக இருக்கும் என்ற அடிப்படையில் தான் என தெரிவித்தனர்.இந்நிலையில் கடந்த வாரம் வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை வானிலை ஆய்வு மையம் கனமழை  பெய்யும் என அறிவித்தது.

அதனால் தொடர் மழையின் காரணமாக அந்தந்த மாவட்ட ஆட்சியர் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தனர்.இந்நிலையில்  பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தேர்வு நெருங்கி வருகின்றது.ஆனால் பாடங்கள் அனைத்தும் முடிவு பெறாமல் இருகின்றது.பள்ளிகள் இவ்வாறு அடிகடி விடுமுறை அளித்தால் மாணவர்கள் எவ்வாறு தேர்வு எழுதுவார்கள் என ஆசிரியர்கள்  வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாள் விடுமுறை அளிக்கப்பட்டது.அதனை ஈடுசெய்யும் விதமாக வருகின்ற சனிக்கிழமை தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் வேலை நாளாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

author avatar
Parthipan K