பாகிஸ்தானிலும் தப்லீக்ஜமாஅத் மாநாடு தான் கொரோனாவின் ஹாட்ஸ்பாட் : அடுத்தடுத்து உயிரிழப்பு!

0
65

உலகமெங்கும் பல்வேறு நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸால் பிரதமர் மோடி இந்தியா முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார். இந்த உத்தரவு வரும் முன்னே டெல்லியில் தப்லீக் ஜமாஅத் மாநாடு நடந்துள்ளது, இந்த மாநாட்டில் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வெவ்வேறு மாநிலங்களில் உள்ள சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர்.

இதற்கிடையில் டெல்லி தப்லீக் ஜமாஅத் மாநாட்டில் கலந்து கொண்ட கொரோனா தொற்று ஏற்பட்டது உறுதியாகி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட பலரை சோதனை செய்ததில் நாடு முழுவதும் நோய்த்தொற்று ஏற்பட்டு வரும் எண்ணிக்கை வேகமாக உயர்ந்தது.

இதனால் இவர்களை கண்டறிந்து பரிசோதனை செய்வது மற்றும் தனிமைப்படுத்துவது உள்ளிட்ட வேலைகளில் அரசு தீவிரம் காட்டியது. மேலும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு அவரின் உறவினர்கள் நண்பர்கள் அப்பகுதி மக்கள் என பலரை தனிமைப்படுத்தி அரசு கண்காணித்து வருகிறது.

இந்த நிலையில் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணம் லாகூர் அருகில் உள்ள ராய்பிண்ட் நகரில் நடந்த தப்லீக் ஜமாத் மாநாட்டிலும் கொரோனா தொற்று ஏற்பட்டது உறுதியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த மாநாட்டில் 2,50,000 மக்கள் கலந்து கலந்து கொண்டதால் அந்நாட்டு அரசு அவர்களை பரிசோதனை செய்து தனிமை படுத்தி தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளது.

பாகிஸ்தானிலும் இந்த மாநாட்டிற்கு வெளிநாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கானோர் கொண்டதால் அவர்கள் மூலமாக பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரியவந்தது. இந்த மாநாடு நடந்த சமயத்தில் பாகிஸ்தானில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது தடையை மீறி இவ்வாறு நடத்தப்பட்டுள்ளதை அறிந்து அந்நாட்டு அரசு கண்டனம் தெரிவித்திருந்தது.

பாக். தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்ட 40 மதபோதகர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அந்த நகரில் இருந்து யாரும் வெளியேறக்கூடாது என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்குள் அம்மாநாட்டில் கலந்து கொண்ட 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வெவ்வேறு ஊர்களுக்கு சென்றுவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

அந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் வழங்கிய பட்டியலின் அடிப்படையில் போலீசார் தீவிரமாக தேடி 7 ஆயிரம் பேரை கண்டுபிடித்து தனிமை படுத்தியுள்ளனர். மேலும் அக்கூட்டத்தில் கலந்துகொண்ட 1500 வெளிநாட்டினர் உட்பட 2500 பேரை மாநாடு நடந்த இடத்திலேயே தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர்.

நேற்றுவரை அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் 300 பேருக்கு வரலாற்று உறுதியாகியுள்ளது அதில் 2 பேர் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானில் இதுவரை 2,280 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், அதில் ஆயிரக்கணக்கானோர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டவர் ஆவார். பாகிஸ்தானில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது.

இதனையடுத்து பாகிஸ்தானின் அறிவியல் துறை அமைச்சர் ஃபாவத் சௌத்ரி தடையை மீறி நடத்தப்பட்ட இக்கூட்டத்திற்கு கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளார். மேலும் அரசின் சட்ட திட்டங்களை மதிக்காத எந்த அமைப்பும் ஆபத்தானது என்று கூறிய அவர், சிந்து மாகாணத்தின் ஹைதராபாத் நகரில் உள்ள தப்லீக் ஜமாஅத் தலைமையகத்திற்கு சீல் வைக்கப்பட்டதையும் உறுதி செய்தார்.

author avatar
Parthipan K