மது பானங்களை ஹோம் டெலிவரி செய்யும் ஸ்விகி

0
74

மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தற்போது நாங்காவது கட்டமாக தொடர்ந்து வருகிறது.

இந்த ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்த மாநில அரசுகள், மதுபானக்கடைகளையுல் சில கட்டு பாட்டுகளுடன் திறப்பதாக அறிவித்திருந்தது. ஆனால் 45 நாளுக்கு மேல் மது பார்க்காத மது பிரியர்கள், அலை அலையாக மதுக்கடையை மொய்ததன் விளைவு, சில மாநிலங்களில் மதுக்களின் விலைகள் ஏறப்பட்டன, சில மாநிலங்கள் மதுக்கடைகளை அரசே மூடியது, சில மாநிலங்களில் மதுக்கடைகளை மூட நீதிமன்றமே உத்தரவிட்டது.

இதனையடுத்து உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்து மதுக்கடைகளை மாநிலங்கள் திறந்துள்ளன.

இந்நிலையில் பிரபல உணவு ஹோம் டெலிவரி நிறுவனமான ஸ்விகி மது பானங்களை வீட்டுக்கு வந்து டெலிவரி செய்யும் முறையை தொடங்கியுள்ளது.

முதற்கட்டமாக ஜார்கண்ட் மாநில அரசி அனுமதியுடன் அந்த மாநிலத்தில் இந்த சேவையை துவங்கியுள்ள ஸ்விகி, இதனி மற்ற மாநிலங்களிலும் விரிவு படுத்த திட்டமிட்டுள்ளது.

author avatar
Parthipan K