சிறுமி கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற கைதிக்கு ஆயுள் தண்டனையாக மாற்றி சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவு!

0
95
Supreme Court upholds life sentence for prisoner sentenced to death in girl's murder case
Supreme Court upholds life sentence for prisoner sentenced to death in girl's murder case

சிறுமி கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற கைதிக்கு ஆயுள் தண்டனையாக மாற்றி சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவு!

கதக் மாவட்டத்தில் கடந்த 2010 ம் ஆண்டு டிசம்பர் மாதம் இருபத்தி எட்டாம் தேதி ஒரு ஐந்து வயது குழந்தையை உறவுக்கார சிறுவன் ஒருவன் கற்பழித்ததோடு, கொலை செய்து உடலை சாக்கு மூட்டையில் கட்டி அங்கு உள்ள கால்வாயில் வீசி எறிந்து விட்டுச் சென்றிருந்தான். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த சிறுவனை கைது செய்தனர்.

மேலும் அந்த சிறுவன் மீது போலீசார் கதக் மாவட்ட கோர்ட்டில் வழக்கும் தொடுத்தனர். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை முடிவில் 2012 ம் ஆண்டு அந்த சிறுவனுக்கு தூக்கு தண்டனை விதித்து கதக் கோர்ட் அதிரடி தீர்ப்பை பிறப்பித்தது. தீர்ப்பை எதிர்த்து சிறுவனது குடும்பம் சார்பில் கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை கடந்த 5 ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில், கடந்த 2014 ம் ஆண்டு சிறுவனுக்கு தூக்கு தண்டனை விதித்த கீழ் கோர்ட்டின் தீர்ப்பை கர்நாடக ஐகோர்ட்டு உறுதி செய்தது. அதன் காரணமாக கர்நாடக ஐகோர்ட்டில் வெளியான இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அந்த சிறுவன் மேல் முறையீடு செய்தான். அந்த மனுவின் மீதான விசாரணை கடந்த 4 ஆண்டுகளாக சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கு நேற்று முன்தினம் நீதிபதிகள் நாகேஸ்வரராவ், சஞ்சீவ் கண்ணாமற்றும்  பி ஆர் காகவி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பில் ஆஜரான வக்கீல் குற்றவாளிக்கு தூக்கு தண்டனையை மாற்றாமல் உறுதி செய்ய  வேண்டும் என்று வாதிட்டார். ஆனால் மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் குற்றம் செய்த போது குற்றவாளிக்கு 16 வயதுதான் என்றும், மேலும் அவரது குடும்ப பின்னணி மற்றும் சிறையில் ஒழுக்கமாக நடந்து கொண்டது போன்றவற்றை கணக்கில் எடுத்துக்கொண்டு தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டுள்ளார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்தனர். மேலும் அவர்கள் குற்றவாளிக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்துள்ளனர். இது குறித்து நீதிபதிகள் கூறும்போது குற்றவாளி வெறுப்பான ஒரு குற்றத்தை செய்துள்ளார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் அவருக்குத் தூக்கு தண்டனை விதித்து இருப்பது சரியான நடவடிக்கை இல்லை என்றும், அவருக்கு ஆயுள் தண்டனை போதுமானதாக இருக்கும் என்றும் நாங்கள் கருதுகிறோம்.

30 ஆண்டுகள் அவருக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனை. அவரால் சமூகத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஆற்றல் குறையும் என்றும் நாங்கள் நம்புகிறோம். மேலும் 30 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு முன்பு விடுதலை செய்யக்கோரி கேட்க குற்றவாளிக்கு எந்த உரிமையும் இல்லை என்றும் கூறியுள்ளனர்.