ரோஹித் ஷர்மா இதைக் கண்டிப்பாக செய்யவேண்டும்… சுனில் கவாஸ்கர் கருத்து

0
72

ரோஹித் ஷர்மா இதைக் கண்டிப்பாக செய்யவேண்டும்… சுனில் கவாஸ்கர் கருத்து

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் , ரோஹித் ஷர்மா சீக்கிரமாக அவுட் ஆவது குறித்து தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா டி 20 போட்டிகளில் இந்த ஆண்டு மிக மோசமாக விளையாடி வருகிறார். அதுகுறித்த விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதில் ஒருவராக முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் “ரோஹித் ஷர்மா தன் கைவசம் வைத்திருக்கும் ஷாட்களைப் பார்க்கும் போது, அவர் உண்மையில் இப்போது செய்ய விரும்புவதை செய்ய வேண்டியதில்லை, அது பந்து வீச்சாளர் பந்தை வெளியிடுவதற்கு முன்பே ஆடுகளத்தில் இறங்க வேண்டும்” என்று கவாஸ்கர் இந்தியா டுடேவிடம் கூறினார். .

முன்பு அவர் டி20 கிரிக்கெட் விளையாடிய விதம், அவரது ஸ்கோரிங் மற்றும் ஸ்ட்ரைக் ரேட் அபரிமிதமாக இருந்தது. இது மிகவும் அருமையாக இருந்தது. மேலும் அவர் புதிதாக எதையும் செய்ய முயற்சிக்கவில்லை. இங்கே, கடந்த சில போட்டிகளில், அது எனக்கு தோன்றுகிறது. அவர் இன்னும் கொஞ்சம் அதிகமாகச் செய்ய விரும்புவதாக. அவர் இன்னும் கொஞ்சம் நேரம் எடுத்துக்கொண்டு ஆடவேண்டும். அவர் மெதுவாக தொடங்கினாலும், அவரால் அதை சமன்படுத்த முடியும்.

சிவப்பு பந்தைப் போல அல்லாமல் வெள்ளைப் பந்து அதிகமாக நகரக்கூடும். ஆனால் அந்தச் சிறிய அசைவுதான் மட்டையின் நடுவில் அடிக்கும் பந்துக்கும், பந்து மட்டையின் விளிம்பை எடுப்பதற்கும் இடையே உள்ள வித்தியாசமாக இருக்கலாம். பந்தை ஸ்டாண்டிற்குள் அடிப்பதை விட காற்றில் அடிப்பது. ரோஹித் தனக்கு இன்னும் சிறிது நேரம் கொடுக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் மேலும் கூறினார்.