டிரம்பிடம் மன்னிப்பு கேட்ட சுந்தர்பிச்சை – யார் சொன்னது அவரே சொல்லிக்கிட்டார் கலாய்க்கும் நெட்டிசன்கள்

0
99

டிரம்பிடம் மன்னிப்பு கேட்ட சுந்தர்பிச்சை – யார் சொன்னது அவரே சொல்லிக்கிட்டார் கலாய்க்கும் நெட்டிசன்கள்

கொரோனோ வைரஸ் உலகத்தையே ஆட்டிவைத்து வரும் நிலையில் உலகின் தலைசிறந்த பொருளாதாரமாகவும் உயர் மருத்துவ சேவைகள் கிடைக்கும் எந்த முன்னேறிய நாடுகளையும் கொரோனா விட்டுவைக்கவில்லை.

அந்தவகையிலே கொரோனோ வைரஸ் பாதிப்பால் கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க அதிபர் அந்த நாட்டில் அவசர நிலையை பிரகடணப் படுத்தினார். மேலும் செய்தியாளர்களிடம் கொரோனோ வைரஸ் குறித்த தகவல்களை சேகரிக்க கூகுல் நிறுவனம் தனி வளையதளம் உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனையடுத்து கூகுல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை அமெரிக்க அதிபர் கூறியதுபோல எந்த ஒரு வளையதளமும் கூகுல் சார்பாக உருவாக்கவில்லை. ஆனால் கூகுல் நிறுவனத்தின் தாய் நிறுவனபான ஆல்பபெட் சார்பாக ஒரு வளையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தளம் கூட கலிபோர்னியா மாகாணத்தில் மட்டுமே செயல்படும் என்றும் தெரிவித்தார்.

இதனையடுத்து அதிபர்
டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில் சில போலி செய்தி நிறுவனங்கள் தவறான செய்தியை பரப்பி வருகின்றன. கூகுல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தன்னிடம் மன்னிப்பு கேட்டு விட்டதாகவும் அவர் மிகவும் நல்ல மனிதர் என்றும் புகழாரம் சூட்டி உள்ளார்.

இதனையடுத்து அமெரிக்க அதிபரை பல நெட்டிசனகளும் “யார் சொன்னது அவரே சொல்லிக்கிட்டார்” என்று சமூக வளையதளங்களில் பதிவிட்டு வருகின்றர்.

author avatar
Parthipan K