இந்த ஆண்டு சுந்தர் பிச்சையின் சம்பளம் எவ்வளவு தெரியுமா ?

0
93

இந்த ஆண்டு சுந்தர் பிச்சையின் சம்பளம் எவ்வளவு தெரியுமா ?

தமிழகத்தைச் சேர்ந்தவரான சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்திற்கும் அதன் தாய் நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனத்துக்கு தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வருகிறார்.

கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக செயல்பட்டு வரும் சுந்தர் பிச்சை உலகளவில் அதிக சம்பளம் பெறும் நிறுவனர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இதையடுத்து தற்போது அவர் ஆல்பாபெட் நிறுவனத்துக்கும் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

இதனால் அவரது சம்பளம் பல மடங்கு உயரும் என எதிர்பார்க்கப்பட்டது. 2020 ஆம் ஆண்டுக்கான அவரது சம்பளம் பற்றிய விவரம் இப்போது வெளியாகியுள்ளது. இந்நிலையில் சுந்தர் பிச்சை 2020 ஆண்டுக்கு ரூ.14 கோடி சம்பளம் பெற இருக்கிறார். என்னடா இவ்வளவுக் கம்மியாக இருக்கிறது என யோசிக்கிறீர்களா ?.

சம்பளம்தான் கம்மி. ஆனால் அவருக்கு கூகுள் நிறுவனத்தில் சுமார் 1700 கோடி ரூபாய் பங்கு தொகையாக பெற இருக்கிறார். இதற்கு முன்னதாக அவர் இருமுறை இதுபோல அவர் பங்குகளை வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தகக்து.

கடந்த 2004 ஆம் ஆண்டு சுந்தர் பிச்சை அந்த நிறுவனத்தில் சேர்ந்தார். அங்கு அவரது செயல்திறனைப் பார்த்து 10 வருடங்களிலேயே அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உயர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இந்திய அளவில் சிறந்த தொழில் முனைவோர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.

author avatar
Parthipan K