நடிகர் மற்றும் ஒளிப்பதிவாளர் திடீர் மரணம்! காரணம் என்ன?

0
157
Sudden death of actor and cinematographer! What is the reason?
Sudden death of actor and cinematographer! What is the reason?

நடிகர் மற்றும் ஒளிப்பதிவாளர் திடீர் மரணம்! காரணம் என்ன?

கொரோனா காலகட்டத்தில் பலரும் நம்மை விட்டு பிரிகின்றனர்.அவர்கள் நினைவிலும், அவர்கள் பிரிவின் காரணமாக அவரது குடும்பத்தினர் பெரிதும் கவலைஅடைகின்றனர்.மற்றவர்களை பற்றி நமக்கு தெரியாவிட்டாலும் திரை உலகினர் பலரும் எதோ ஒரு காரணத்தினால் நம்மை விட்டு பிரிவது மிகவும் கவலைக்குள்ளாக்குகின்றன.

அந்த வகையில் பழம்பெரும் நடிகர் சி.எல்.ஆனந்தனின் மகனும், பிரபல நடிகைகளான டிஸ்கோ சாந்தி மற்றும் லலித குமாரி ஆகியோரின் சகோதரரும் ஆன அருண்மொழிவர்மன் நேற்று உயிரிழந்தார்.

இவர் தமிழில் சிமில் மற்றும் சில படங்களிலும் நடித்துள்ளார்.மேலும் சில படங்களில் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றி உள்ளார்.தெலுங்கில் ஸ்ரீஹரி நடித்த பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக இருந்திருக்கிறார்.அருண்மொழி வர்மனுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார்.

சிகிச்சை தொடர்ந்து வந்த நிலையில் சில தினங்களில் அவரின் உடல்நிலை மோசம் அடைந்ததை அடுத்து சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது வீட்டிற்கு அவரை அழைத்து வந்தனர்.இந்நிலையில் அவர் உடல் நிலை தொடர்ந்து மோசமானதை தொடர்ந்து அருண்மொழிவர்மன் நேற்று காலை உயிரிழந்தார்.அவருக்கு வயது 52 ஆகும்.அவருக்கு ஷர்லி என்ற மனைவியும், அப்ரீனா,மகாலட்சுமி என்று இரண்டு மகள்களும் உள்ளனர்.அருண்மொழிவர்மனின் மறைவுக்கு திரையுலகினர் ஆழ்ந்த இரங்கல்கள் தெரிவித்து வருகின்றனர்.