விஷாலால் தான் செய்த தவறு ; கண்டுபிடித்து ரூட்டை மாற்றிய சுந்தர் சி !

0
87

விஷாலால் தான் செய்த தவறு ; கண்டுபிடித்து ரூட்டை மாற்றிய சுந்தர் சி !

விஷாலுக்காக ஆக்‌ஷன் திரைப்படம் இயக்கி படுதோல்வி அடைந்த நிலையில் மீண்டும் தன்னுடைய களமான காமெடியில் இறங்கவுள்ளார் சுந்தர் சி.

சுந்தர் சி எப்போதும் அந்தந்த காலத்தில் டிரண்ட் ஆக எந்த ஜானர் படங்கள் இருக்கிறதோ அதில் நுழைந்து வெற்றி காண்பார். காமெடி படங்களை இயக்கிய அவர் பேய் ட்ரண்ட் உருவானதை அடுத்து தனது காமெடிக் கதைகளில் பேயை நுழைத்துக் கொண்டு வெற்றிப் படங்களை கொடுக்க ஆரம்பித்தார்.

ஆனாலும் எப்போதும் தனது படங்களில் காமெடிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஆக்‌ஷனைக் கொஞ்சம் அடக்கி வாசிப்பவர். ஆனால் முதன் முதலாக முழுக்க முழுக்க ஆக்‌ஷன் களத்தில் அவர் இயக்கிய ஆக்‌ஷன் படம் படுதோல்வி அடைந்தது. சுந்தர் சி யை நம்பி வந்த ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்தது. இதனால் கடும் அப்செட்டான சுந்தர் சி இப்போது தனது தவறை உணர்ந்துள்ளார்.

விஷாலுக்காக ஒரு ஆக்‌ஷன் திரைப்படம் எடுக்க முடிவு செய்த தவறை உணர்ந்த அவர் இப்போதைக்கு ஆக்‌ஷன் கதைகள் வேண்டாம் என முடிவு செய்துள்ளார். இதையடுத்து தனது ஹிட் ரூட்டான காமெடிக்கு மீண்டும் திரும்பியுள்ளார். அரண்மனை 1, அரண்மனை 2 வரிசையில் இப்போது அரண்மனை 3 எடுப்பதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளார். இந்த படத்தில் ஆர்யா, யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்க இருக்கின்றனர். மற்ற நடிகர் நடிகையர் விவரம் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

author avatar
Parthipan K