படியில் பயணம் நொடியில் மரணம்!..அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பள்ளி மாணவன்!..பதறவைக்கும் வீடியோ..

0
77
Step by step death in an instant!..Luckily the school student survived!..Horrifying video..
Step by step death in an instant!..Luckily the school student survived!..Horrifying video..

படியில் பயணம் நொடியில் மரணம்!..அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பள்ளி மாணவன்!..பதறவைக்கும் வீடியோ..

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் பகுதியில் இருந்து வரும்  அச்சரப்பாக்கம் வரை செல்லும் பேருந்தில் இன்று காலை வழக்கம் போல் சென்று கொண்டிருந்தது.இந்த பேருந்தில் தினமும் பள்ளி மாணவர்கள் மற்றும் மாணவிகளே அதிகம் வருகிறார்கள்.

இந்நிலையில்  மருவத்தூர் அருகே செல்லும்போது படிக்கட்டில் தொங்கியபடி பத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சென்றதில் அதில் ஒன்பதாம் வகுப்பை சேர்ந்த செயின்ட் ஜோசப் என்கிற மாணவன் கூட்ட நெரிசலில் தடுமாறி நடுரோட்டில் கீழே விழுந்தான்.இதில் பின்னால் வந்த ஒருவர் தனது மொபைலில் வீடியோவாக பதிவு செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் அந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.அதன்படி இந்த சம்பவத்தை பார்த்த அப்பகுதி மக்கள் கூறுகையில்,காலை மற்றும் மாலை வேளையில் இந்த பேருந்து எண் 19 கொண்ட அரசு பேருந்து ஒரே ஒரு பேருந்து மட்டும் செயல்படுவதாகவும், இப்பகுதியில் 200க்கும்  மேற்பட்ட மாணவர்கள் மற்றும் மாணவிகள் அதிக அளவில்  இங்கிருந்து செல்ல இருக்கிறார்கள்.

அதனால் கூடுதல் பேருந்து இல்லாததற்கே இதற்கு காரணம் எனவும் உடனடியாக இதற்கான  உரிய நடவடிக்கை எடுத்து கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.இந்நிலையில் படியில் இருந்து விழுந்த மாணவன் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் பிழைத்தார்.

பின்பு அருகில் இருந்த பொதுமக்கள் அனைவரும் திரண்டு வந்து சிறுவனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.மேலும் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது.

author avatar
Parthipan K

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here