மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு வழங்கப்படும் – மத்திய அரசு தகவல்!

0
89

கொரோனா தொற்று பரவல்  காரணமாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் முழு ஊரடங்கு முறை பின்பற்றப்பட்டு வந்தது. அதற்கு பிறகு மத்திய அரசின் வழிமுறைகளை பின்பற்றி தொற்றுக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. 

தற்போது சில தளர்வுகளை அறிவித்தது மாநில அரசு. ஊரடங்கு காலத்தில் அனைத்து மாநிலங்களிலும் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாயினர். இதனால் இந்திய அளவில் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது முதல் கட்ட நடவடிக்கையாக மத்திய அரசு 6000 கோடி ரூபாயை தமிழ்நாடு உள்பட சில முக்கிய மாநிலங்களுக்கு கடனாக வழங்க உள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு தமிழ்நாடு உட்பட 16 மாநிலங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

ஜிஎஸ்டி இழப்பீடாக ஒரு லட்சத்து 10 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த நஷ்டத்தை ஈடு கட்டுவதற்காக மட்டுமே இந்த கடன் வழங்கப்படுகிறது என்பதையும் அறிவித்துள்ளது மத்திய அரசு. அதுமட்டுமன்றி இந்த கடனின் வட்டியாக 5.19 சதவீதம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இக்கடன் தொகையை 3 முதல் 5 ஆண்டுக்குள் அடைக்கப்பட கால அவகாசம் விதிக்கப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K