அவர் ஒரு சங்கி! அதிமுகவின் முக்கிய புள்ளியை கலாய்த்த எதிர்க்கட்சித் தலைவர்!

0
76

நாங்கள் சங்கிகள் அல்ல 5 ஆண்டுகள் கேவலமான பிழைப்பு பிடித்தது ஸ்டாலின்தான் சங்கி என்று கூறுபவர்களுக்கு திகார் ஜெயில் தயாராக இருக்கின்றது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்திருக்கின்றார்.

கடவுள் பக்தியில் பாஜகவும் அதிமுகவும் ஒன்று தான் கொஞ்சம் விட்டால் எங்களை ஸ்டாலின் சுட்டுக்கொன்றே விடுவார் போலிருக்கிறது. அவர்கள் ஒழுக்கமாக இருந்தால் நாங்களும் ஒழுக்கமாக இருப்போம் இல்லையெனில் வேறு மாதிரி ஆகிவிடும் என ராஜேந்திரபாலாஜி ஆவேசமாக தெரிவித்திருக்கின்றார்.

விருதுநகரில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், ராஜேந்திர பாலாஜி மீது நடத்திய கடும் சொற்போருக்கு தான் இவ்வாறு பதிலடி கொடுத்து இருக்கின்றார் ராஜேந்திரபாலாஜி.

அதிமுக அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் எவ்வாறு இருக்கிறார்கள் என்பதற்கு ஒரு முக்கியமான உதாரணம், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேந்திர பாலாஜி என்று சொன்னால் போதும்.

ஒரு அமைச்சர் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு உதாரணம் ராஜேந்திர பாலாஜி, ஒரு அரசியல்வாதி எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு உதாரணமாக இருக்கக்கூடியவர் அவர்தான். என ரொம்ப ஆவேசமாக பேசி இருக்கிறார் ஸ்டாலின்.

மேல் கொண்டு பேசினால் நாக்கை அறுப்பேன், குத்தி விடுவேன், வெட்டி விடுவேன், என்பது போன்ற பேச்சுக்கள் தான் அவருடைய ஸ்டைலாக இருந்து வருகிறது.

திமுக தொண்டர்களின் வீட்டுக்கதவை உடைப்போம் சட்டையை கிழிப்போம் கமல்ஹாசனை தூக்கில் போட வேண்டும் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் சாத்தூர் தொகுதிக்கு உள்ளே நுழைவார் என்றால் , அவரை பன்றியை சுடுவது போல் சுடவேண்டும், உள்ளாட்சித் தேர்தலில் பல சித்து வேலைகளைச் செய்து அதிமுக வெற்றி பெற வைப்பேன், கொரோனா என்பது மக்களுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை, அதிமுகவுக்கு வாக்களிக்காத இஸ்லாமியர்களை கொச்சைப்படுத்தி பேசுவது, இவை அனைத்துமே ராஜேந்திரபாலாஜி சொல்வதுதான் என்று கூறியவர், ஜெயலலிதா இருந்திருந்தால் இவரை ஒரு நாள் கூட பதவியில் வைத்திருக்க மாட்டார் என்று தெரிவித்திருக்கிறார்.

ஜெயலலிதா இறப்பிற்குப் பின்பு, எடப்பாடி பழனிசாமியால் தன்னை எதுவும் செய்துவிட முடியாது. என்ற தைரியத்தில் ஒரு முழுமையான சங்கியாகவே மாறிவிட்டார் ராஜேந்திர பாலாஜி.

திமுக ஆட்சிக்கு வந்ததும் புழல் சிறைக்கு அனுப்பப்பட இருக்கின்றார் ராஜேந்திர பாலாஜி. அவர் வாழ்நாள் முழுவதும் சிறையில் தான் இருக்க வேண்டும் என்று எச்சரித்துக் கொள்கிறேன் என பேசி இருந்தார் ஸ்டாலின்