இந்தியை திணிக்கும் மத்திய பாஜக அரசுக்கு திமுக கண்டன ஆர்ப்பாட்டம்! ஸ்டாலின் மகள் நடத்தும் பள்ளிக்கு எதிராக எப்போது கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் பாஜக?

0
81

இந்தியை திணிக்கும் மத்திய பாஜக அரசுக்கு திமுக கண்டன ஆர்ப்பாட்டம்! ஸ்டாலின் மகள் நடத்தும் பள்ளிக்கு எதிராக எப்போது கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் பாஜக?

திமுகவின் உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் நேற்று திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த கூட்டத்தில் இந்தியை திணிக்கும் மத்திய பாஜக அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

மத்திய அரசு அலுவலகங்களும், சிபிஎஸ்இ பள்ளிகளிலும், தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் இந்தியில் எழுத்துக்கள் வங்கி பணப் பரிமாற்றம் மின்னஞ்சலிலும் இந்தித் திணிப்பு
மேலும் நாட்டின் உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா அவர்கள் ‘இந்தி மட்டுமே இந்தியாவின் அடையாளம்’ என்று தமிழ் மொழியை உள்ளிட்ட மாநில மொழிகளை அவமதித்து உள்ளார்.
இதற்கு கடும் கண்டனத்தை உயர்நிலை செயல் திட்டக்குழு தெரிவித்துள்ளது.

மத்திய பாஜக அரசு தொடர்ந்து தமிழ் மொழியை அழிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதால் இதனை கண்டிக்கும் விதமாக 20.9.2019 அன்று தமிழகத்தில் உள்ள அனைத்து வருவாய் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு அறிவித்துள்ளது.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பாஜக கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. அக்கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா அவர்கள் தெரிவித்துள்ளது என்னவெனில்,

திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின் மகள் செந்தாமரை ஸ்டாலின் சென்னையில் நடத்தும் பிரபலமான சன்ஷைன் பள்ளியில் இந்தி திணிப்பு கட்டாயப் படுத்தப்படுகிறது என்றும், தமிழில் பேசினால் ரூபாய் 500 அபராதம் என்றும் இந்தியை இரண்டாவது பாடமாக கற்பித்து வருவதால் இதனை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிரடியாக தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் தனது மகள் நடத்தும் பள்ளிக்கு எதிராக எப்போது கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த போகிறார் என்று சமூக வலைதளங்களில் கேலியும் கிண்டலும் வலைத்தளவாசிகள் செய்து வருகின்றனர். இதற்கு பதில் சொல்ல முடியாமல் திமுகவினர் 200 ரூபாய் உடன்பிறப்புகள் தவித்து வருகின்றனர்.

‘ஊருக்குத்தான் உபதேசம் நம் வீட்டுக் இல்லை’ என்ற சொல்லுக்கு ஏற்ப திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நன்றாகவே செயல்பட்டு வருவதாக நடுநிலைவாதிகள் நக்கலடித்து கொண்டு இருக்கின்றனர்.

author avatar
Parthipan K