முருங்கைக்கீரை தோசை மற்றும் சாம்பார்! முழு விவரங்கள் இதோ!

0
71

முருங்கைக்கீரை தோசை மற்றும் சாம்பார்! முழு விவரங்கள் இதோ!

அனைவரும் முருங்கைக் கீரையில் கூட்டு பொரியல் பருப்பில் சேர்ப்பது போன்றவை மட்டும்தான் செய்ய முடியும் என்று நினைத்துக் கொண்டிருப்பார்கள் ஆனால் இந்த பதிவில் முருங்கைக் கீரை தோசை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:முதலில் மூன்று கப் இட்லி அரிசி , ஒரு கப் துவரம் பருப்பு, ஒரு கட்டு முருங்கைக் கீரை , தேவையான அளவு உப்பு, எண்ணெய் தேவைக்கேற்ப.

செய்முறை :முதலில் இட்லி அரிசி, துவரம் பருப்பு இரண்டையும் 2 மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.

மேலும்  2 மணி நேரம் ஆன பிறகு அவற்றுடன் கீரையும் சேர்த்து நைசாக அரைத்து கொள்ள வேண்டும்.

மேலும் அரைத்த மாவுடன் உப்பு சேர்த்து கரைத்து 8 மணி நேரம் விட வேண்டும் பிறகு மாவு புளித்த பிறகு   8 மணி நேரம் கழித்து மெல்லிய தோசைகளாக ஊற்றி எடுக்க வேண்டும்.சூடான முருங்கைக் கீரை தோசை ரெடி.

முருங்கைக் கீரை சாம்பார் முருங்கைக்கீரை தோசை உடன் என்பதற்கு சுவையான மேலும் ஊட்டச்சத்து மிகுந்த முருங்கைக்கீரை சாம்பார் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:  கால் கப் துவரம்பருப்பு , ஒரு கட்டு முருங்கைக் கீரை, 15 சின்ன வெங்காயம், ஒரு தக்காளி, ஒரு பச்சை மிளகாய், இரண்டு பல் பூண்டு, கால் டீஸ்பூன் மஞ்சள்தூள் , ஒரு டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள், தேவையான அளவு உப்பு, எண்ணெய் தேவைக்கேற்ப, இரண்டு டீ ஸ்பூன் விளக்கெண்ணெய் .

மேலும் சாம்பார் தாளிக்க: அரை டீஸ்பூன் கடுகு ,அரை டீஸ்பூன் உளுந்து ,அரை டீஸ்பூன் ,சீரகம் ,அரை டீஸ்பூன்,பெருஞ்சீரகம் , இரண்டு வரமிளகாய் , ஒரு கைப்பிடி பெருங்காயம் , ஒரு கொத்து கறிவேப்பிலை .

செய்முறை :

முதலில் ஒரு பாத்திரத்தில் பருப்பை எடுத்துக்கொண்டு நன்றாகக் கழுவிவிட்டு பருப்பு மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு, அதில் 2 சொட்டு விளக்கெண்ணெய், சிறிது மஞ்சள் தூள், பெருங்காயம் சேர்த்து நன்கு குழைய வேக வைக்க வேண்டும்.

பிறகு   கீரையை சுத்தம் செய்து நீரில் அலசி வைக்க வேண்டும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் இவற்றை நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு குழம்பு வைக்கும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைப் போட்டு தாளித்து வெங்காயம், பூண்டு, தக்காளி இவற்றை அடுத்தடுத்து சேர்த்து வதக்க வேண்டும்.

மேலும் வதங்கியதும் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்க்க வேண்டும். அதனுடன் பருப்பைக் கடைந்து ஊற்றவும். தேவையான தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.

நன்றாகக் கொதித்த பிறகு கீரையைப் போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கவும். இப்போது முருங்கைக் கீரை சாம்பார் தயார்.

 

author avatar
Parthipan K