தனது வீட்டையே தானமாக கொடுத்த பாடகர்; வீடியோவில் இருக்கும் உண்மை தெரிந்தால் வியந்து போவீர்கள்!

0
66

தனது வீட்டையே தானமாக கொடுத்த பாடகர்; வீடியோவில் இருக்கும் உண்மை தெரிந்தால் வியந்து போவீர்கள்!

இந்திய திரையுலகில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆங்கிலம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் பாடி மக்கள் மனதை வென்றவர் எஸ்.பி.பி. ஒரே நாளில் 17 பாடல்கள் 20 பாடல்களை பாடி கின்னஸ் சாதனைகளை படைத்த சாதனையாளர்.
இவரின் பாடல் இல்லாத படங்களே இல்லை என்பது தமிழ் சினிமாவின் கடந்தகால வரலாறாகும். திரைப் பிண்ணனி பாடகர் மற்றும் நடிகராக இருந்துவரும் எஸ்பிபி ஆந்திரா நெல்லூரை பூர்வீகமாக கொண்டவர்.

எஸ்பிபி சினிமா பாடகர் என்பது ஒரு புறம் இருந்தாலும், அதீத கடவுள் பக்தியும் ஆன்மீகத்தின் மீதும் பெரிதும் நம்பிக்கை கொண்டவர். தற்போது சென்னையில் வசித்து வருவதால் இவரின் சொந்த ஊரில் பரம்பரை வீட்டை வேதபாட சாலை அமைப்பதற்காக காஞ்சி மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளிடம் தானமாக கொடுத்துள்ளார்.

முறைப்படி வீட்டில் பூஜை செய்யப்பட்டு தானமாக ஒப்படைக்கப்பட்டது. பூஜையின் போது மடாதிபதிகளின் முன் ஆன்மீக பாடலை பாடியது இணையத்தில் வெளியாகியுள்ளது. இவரின் கலைத்துறை சேவைக்காக மத்திய அரசு “பத்ம பூஷன்” வழங்கியது குறிப்பிடத்தக்கது.

author avatar
Jayachandiran