தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! இங்கு செல்லும் ரயில் பாதையில் மாற்றம்!

0
213
#image_title

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! இங்கு செல்லும் ரயில் பாதையில் மாற்றம்!

தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் குஜராத் மாநிலம் உதானா பனிமலையில் மறு பிறவி பணி நடைபெற்று வருகின்றது. அதனால் இன்று சென்னையில் இருந்து புறப்படும் ரயில் மாற்று பாதையில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 10. 10 மணிக்கு புறப்படும் அகமதாபாத் நாவஜீவன் விரைவு ரயில் வண்டி எண் 12656 உசாவால், அகோலா, கோபால், சந்த் ஹிதரம் நகர், மக்ஸி , நாகடா, சாயாபுரி வழியாக இயக்கப்படும்.

மேலும் சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று மாலை மூன்று முப்பது மணிக்கு புறப்படும் ஜோத்பூர் அதிவிரைவு ரயில் வண்டி எண் 22663 அகோலா, கோபால், நாகடா, ரத்லம், சாட்டாகார் மற்றும் அஜ்மீர் வழியாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுசீரமைப்பு பணிகள் முடிவடைந்ததும் மீண்டும் வழக்கம்போல் இயக்கப்படும் என ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 20 மணி நேரம் கழித்து மீண்டும் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
Parthipan K