அரசு ஊழியர்களின் மகன்களுக்கு இனி வேலை இல்லை? முதல்வர் வெளியிட்ட ஷாக் நியூஸ்!

0
153
Sons of civil servants no more jobs? The shock news released by the chief minister!
Sons of civil servants no more jobs? The shock news released by the chief minister!

அரசு ஊழியர்களின் மகன்களுக்கு இனி வேலை இல்லை? முதல்வர் வெளியிட்ட ஷாக் நியூஸ்!

அரசு ஊழியர்களுக்கு விலைவாசி உயர்வின் காரணமாக ஆண்டுக்கு மூன்று முறை அகவிலைப்படி உயர்வு மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி தற்போது நான்கு சதவீதம் அகவிலைப்படி உயர்வு ஏற்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அகவிலைப்படி மட்டுமின்றி பல்வேறு நலத்திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.

மேலும் அரசு ஊழியர்கள் என்றாலே அவர்களுக்கு பல்வேறு சலுகைகளை நாடு முழுவதும் அரசு வழங்கி வருகிறது. அந்த வகையில் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, வீட்டு வாடகை படி மற்றும் ஓய்வூதியம் என பல சலுகைகளை மத்திய மற்றும் மாநில அரசுகளால் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது அரசு ஊழியர்கள் பணிக்காலம் முடிவதற்குள் உயிரிழந்து விட்டால் அவருடைய வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கப்படுவது வழக்கம் தான். ஆனால் தற்போது கருணையாளர் நியமனக் கொள்கையில் திருத்தம் செய்ய மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

அந்த ஒப்புதலின் அடிப்படையில் கருணையாளர் நியமனக் கொள்கையின் படி இறந்த அரசு ஊழியர்களின் மகனுக்கு அரசு வேலை வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இறந்த அரசு ஊழியர்களின் திருமணம் ஆன மகள்களுக்கு வேலை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த கருணையாளர் நியமனக் கொள்கையின் திருத்தத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
Parthipan K