வீட்டை எழுதி தர மறுத்த தாய் – மகன் வெறிச்செயல்..!

0
105

வீட்டை எழுதி கொடுக்க மறுத்த தாயை வெட்டி கொன்ற மகனை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் சரோஜா (80). இவரது மகன் கபாலி அதே பகுதியில் அவரது குடும்பத்தினருடன் தனியே வசித்து வருகிறார். சம்பவதன்று தாய் வீட்டிற்கு வந்த கபாலி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தி வாக்குவாதம் முற்றவே கபாலி தாயை அரிவாளால் வெட்டியுள்ளார்.

சரோஜாவின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கதினர் சரோஜா ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதற்கிடையில் தாயை கொலை செய்ததாக கபாலி காவல்நிலையத்தில் சரணடைந்தார்.

தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.சரோஜாவிற்கு கபாலி மற்றும் 4 மகள்கள் இருந்துள்ளனர். தனது சொத்தை அனைவருக்கும் சரிசமமாக பிரித்து கொடுத்து விட்டு அவர் தனியே ஒரு வீட்டில் வசித்து வந்தார்.

இதற்கிடையில், துபாயில் வேலை செய்து வந்த கபாலி வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். சம்பவதன்று தாய் வீட்டிற்கு சென்ற அவர் தற்போது அவர் இருக்கும் வீட்டை தன் பெயருக்கு எழுதி வைக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு சரோஜா மறுக்கவே இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால், ஆத்திரமடைந்த அவர் தாயாரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த வாக்குமூலத்தை அடுத்து அவர் மீது கொலை வழக்குபதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டிற்காக பெற்ற தாயை மகணே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.