மழைநீர் வடிகாளால் இதுவரை இரண்டு உயிர் பலி.. அரசு உடனே விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்-பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்!

0
136
So far two lives have been lost due to rainwater drainage.. The government should take immediate action - Dr. Ramadoss, founder of Bamaka!
So far two lives have been lost due to rainwater drainage.. The government should take immediate action - Dr. Ramadoss, founder of Bamaka!

மழைநீர் வடிகாளால் இதுவரை இரண்டு உயிர் பலி.. அரசு உடனே விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்-பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்!

தற்பொழுது பருவமழை பெய்து வருவதால் சென்னை, காஞ்சுபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை நீர் ஆங்காங்கே தேங்கி விபத்துக்களை ஏற்படுத்தி வருகிறது.குறிப்பாக மழைநீர் வடிகால் பணிகள் ஆரம்பித்து முடிவு பெறாமலும் உள்ளது.அந்த மழைநீர் வடிகாலில் பலர் தவறுதலாக விழுந்து உயிரிழந்தும் விடுகின்றனர்.தற்பொழுது வரை இருவர் உயிரிழந்துள்ளனர்.இன்று ஒருவர் உயிரிழந்ததை யொட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கலை தெரிவித்துள்ளார்.அதில் அவர் கூறியதாவது,

சென்னையை அடுத்த மாங்காடு நகரத்தில், பணிகள் முடிக்கப்படாத மழைநீர் வடிகால் பள்ளத்தில் தவறி விழுந்து லட்சுமிபதி என்ற தனியார் நிறுவன ஊழியர் இன்று காலை உயிரிழந்திருப்பது வேதனையளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்

தோண்டப்பட்ட மழை நீர் வடிகால் பள்ளங்கள் மூடப்படாததால் கடந்த இரு வாரங்களில் நிகழ்ந்த இரண்டாவது உயிரிழப்பு இதுவாகும். மழைநீர் வடிகால் பணிகளை முடிக்க வேண்டும் அல்லது பள்ளங்கள் மூடப்பட வேண்டும் என தொடர்ந்து எச்சரித்தும் கூட அலட்சியம் தொடர்வது சரியல்ல

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்னும் தீவிரமடையவில்லை. அடுத்து வரும் நாட்களில் மழை உச்சத்தை அடையும் போதும் இப்போதிருப்பது போன்ற பாதுகாப்பற்ற நிலையே தொடர்ந்தால் இன்னும் அதிகமான விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படும் ஆபத்தை அரசு உணர வேண்டும்

பள்ளம் தோண்டப்பட்ட பகுதிகளில் தடுப்பரண்களை வைப்பது மட்டுமே பாதுகாப்பு அல்ல. உடனடியாக முடிக்க வாய்ப்புள்ள பணிகளை மழையில்லாத நாள்களில் நிறைவு செய்ய வேண்டும். அத்தகைய வாய்ப்பில்லாத மழைநீர் வடிகால் பள்ளங்களை உடனடியாக மூடி விபத்துகளை தவிர்க்க வேண்டும்

மழைநீர் வடிகாளால் இரண்டு உயிர்கள் தற்போது வரை இழந்த நிலையில் இனி எந்த ஓர் பலியும் ஆகாத நிலையில் அரசு விரைந்து அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கேட்டுள்ளார்.மேலும் வடிகால் பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.