வேறு சாதி பையனை மணந்த தங்கை! வெறியில் அண்ணன் செய்த கொடூர செயல்! அதுவும் காவல் நிலையத்தில்!

0
94
Sister who married a boy of a different caste! The cruel act committed by the frantic brother! That too at the police station!
Sister who married a boy of a different caste! The cruel act committed by the frantic brother! That too at the police station!

வேறு சாதி பையனை மணந்த தங்கை! வெறியில் அண்ணன் செய்த கொடூர செயல்! அதுவும் காவல் நிலையத்தில்!

காதல் திருமணம் செய்வது தற்போதைய கால சூழலுக்கு தவறு கிடையாது. ஆனால் சில பெற்றோர் மட்டும் இன்னும் கொஞ்சம் பிடிவாதமாகவே உள்ளனர். அதுவும் சில உள் கிராமங்களில் பெற்றோர் காதலை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை. காதல் திருமணம் செய்த தங்கையை காவல் நிலையத்திலேயே அண்ணன் தாக்கியிருக்கும் விஷயம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதுவும் காவலர்களுக்கு மத்தியிலேயே இந்த செயல் நடைபெற்று இருக்கிறது. திருநெல்வேலி மாவட்டத்தில், பேட்டை கோடீஸ்வரன் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தராஜ் 25 வயதான இவரும், திருநெல்வேலி நகரம் பழனி தெருவை சேர்ந்த ரம்யா என்ற இருபத்தி ஒரு வயது பெண்ணும் காதலித்து வருகின்றனர். இவர்களது காதலுக்கு ரம்யாவின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் ரம்யா அவரை திருமணம் செய்வதில் உறுதியாக இருந்தார்.

அதன் காரணமாக இன்று அவர்கள் இருவரும் வீட்டிற்கு தெரியாமல் பதிவு திருமணம் செய்து பேட்டை காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்து உள்ளே சென்றனர். பெற்றோர் ஒத்து கொள்ளாததன் காரணமாக இரு வீட்டு பெற்றோரையும் போலீசார் அழைத்து பேசி உள்ளனர். அங்கு வந்த ரம்யாவின் சகோதரன் அவர்களை மணக்கோலத்தில் பார்த்து அதிர்ந்ததோடு, கையில் கொண்டு வந்த கத்தியைக் கொண்டு ரம்யாவை பலமாக தாக்கி உள்ளான்.

அப்போது தடுக்க வந்த ரம்யாவின் கணவனையும் சரமாரியாக குத்தி விட்டான். அதன் காரணமாக போலீசார் அவர்கள் இருவரையும் தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் ரம்யாவின் அண்ணனான ராம் குமாரையும் சுற்றிவளைத்து பிடித்து கைது செய்துள்ளனர். அப்போது அவர் கூறுகையில் ரம்யா சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டதன் காரணமாக தனக்கு ஆத்திரம் ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.