இது மாதிரி நபர்களை எல்லாம் கண்டு கொள்ள வேண்டாம்: பாடகி சின்மயி அதிரடி கருத்து

0
94

இது மாதிரி நபர்களை எல்லாம் கண்டு கொள்ள வேண்டாம்: பாடகி சின்மயி அதிரடி கருத்து

கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி சமீபத்தில் மீடூ குற்றச்சாட்டு கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது நடிகர் ஒய்ஜி மகேந்திரன் குறித்து கூறிய ஒரு கருத்தும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஒரு ஒய்ஜி மகேந்திரன் அவர்கள் மாணவர்களின் போராட்டம் குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தெரிவித்தார். இளம்பெண்கள் சைட் அடிக்க வேண்டும் என்பதற்காகவே மாணவர்கள் போராடுகிறார்கள் என்று அவர் தெரிவித்த கருத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

ஒய்ஜி மகேந்திரனுக்கு நாலா பக்கங்களிலும் இருந்தும் கண்டனங்கள் குவிந்த நிலையில் இது குறித்து கருத்து கூறிய பாடகி சின்மயி ’இது போன்ற நபர்களை திருத்தவே முடியாது. எனவே இவர்களை எல்லாம் கண்டுகொள்ளாமல் விட்டு விடுவதே சரியானதாகும்.

இவர்களை திருத்த நினைத்தால் நமக்குத்தான் டைம் வேஸ்ட் என்று கூறியுள்ளார். பாடகி சின்மயின் இந்த டுவிட் தற்போது நெட்டிசன்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

author avatar
CineDesk