சிங்கப்பூரின் பிரம்படி பற்றி உங்களுக்கு தெரியுமா..?

0
183

சிங்கப்பூரின் பிரம்படி பற்றி உங்களுக்கு தெரியுமா..?

பெண்ணை தவறான முறையில் பழித்து குற்றங்கள் செய்து சிங்கப்பூர் போலீசிடம் சிக்கினால், கை கால்களைக் கட்டி குனிய வைத்து , பின் புறத்தில் வலிமையான குச்சியால் அடி பின்னிவிடுவார்கள்,
ஒவ்வொரு அடியும் ஒவ்வொரு ஜென்மம் வலிக்கும் அளவிற்கு வச்சி செய்துவிடுவார்கள்.

நாலு பிரம்படிக்கு பதிலா அபராதம் 5 லட்சம் சிங்கப்பூர் டாலர் கட்டுகிறாயா என்றால், பிரம்படிக்கு பயந்து கொண்டு உடனே கட்டி விடுவார்கள். பிரம்படி மீது அந்தளவிற்கு எல்லோருக்கும் பயம்.

அந்த பிரம்பானது மூங்கில் போன்ற ஒரு மரத்தின் குச்சி 1.5 இன்ச் தடிமனாகவும் 4 அடி நீளமாகவும் இருக்கும். அடிப்பதற்கு ஒரு நாள் முன்பு ஊற வைப்பார்கள் அப்பதான் குச்சி உடையாமல் இருக்குமாம்.

தண்டனைக்கு உரியவர்களை முழு நிர்வாணமாகக்  கட்டி வைத்து மேலே சிறுநீரகத்தை பாதுகாக்கும் தடுப்பு வைத்து அடிப்பார்கள். முதல் அடியிலேயே பெரும்பாலானோர் மயக்கம் அடைந்து விடுவார்கள். பின்பு மயக்கம் தெளிய வைத்து தெளிய வைத்து அடிப்பார்கள். மொத்தமாக 24 அடி அடிக்கலாம் என சட்டம் அனுமதி வழங்கியுள்ளது.

4 அடி என்றால் ஒரே காவல் அதிகாரியே அடிப்பார்.  அதற்கும் மேல் என்றால் இரண்டு மூன்று பேர்  மாறிக் கொள்வார்கள். உச்சக்கட்ட விசையோடு ஓங்கி அடிக்க வேண்டும் என்பதே விதி. மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்திலே தடி இறங்கும்.

மயக்கம் தெளிய வைக்க அல்லது மருத்துவரீதியாக வலுவாக இருக்கிறாரா எனப் பரிசோதிக்க மருத்துவர் உடன் இருப்பார். 4 அடிகளுக்கு மேல் வாங்கினாலே பின்பக்க தசை கிழிந்து விடும். 5 அடிகளுக்கு மேல் என்றால் ஒரு வருடம் நடக்கவே முடியாது. புண் ஆறினாலும் தழும்புகள் மறையாது.

பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வது சிங்கபூரிலே இல்லை.  ஏன்னா இந்த அடி தான். ரவுடித் தனம், திருட்டு, கருப்பு பணம், கொள்ளை என்று அனைத்தையும் ஒழித்தது  இந்த அடிதான். 24 அடி வாங்கியவன் வாழ் நாளிலே திரும்ப ஒழுங்காக நடக்கக் கூட முடியாது.

தமிழ் நாட்டிலும் இதுபோன்ற சட்டங்களை கொண்டு வந்தால் சமூகத்தில் நடக்கும் தவறுகள் நிச்சயமாக குறையும். இந்த பிரம்படி சட்டம் தமிழ்நாட்டில் ஒரு வருஷம் நடைமுறையிலே இருந்தாலே போதும் தமிழ்நாடும் குற்றங்கள் குறைந்த சிங்கப்பூராகி விடும்…!!                

author avatar
Jayachandiran