உங்க வால் ஆட்டுதலை வட மாவட்ட மருத்துவரோடு வச்சுக்கோங்க இங்க ஒட்ட நறுக்கப்படும்! திமுக எம்பி செந்தில்குமாரை வச்சு செய்த கிருஷ்ணசாமி மகன்

0
85

உங்க வால் ஆட்டுதலை வட மாவட்ட மருத்துவரோடு வச்சுக்கோங்க இங்க ஒட்ட நறுக்கப்படும்! திமுக எம்பி செந்தில்குமாரை வச்சு செய்த கிருஷ்ணசாமி மகன்

கடந்த கால தமிழக அரசியலில் ஓரளவு அரசியல் நாகரிகம் பின்பற்றப்பட்டு வந்தது தற்போது அதையெல்லாம் காற்றில் பறக்க விட்டது போல தமிழக அரசியல் தலைவர்களின் செயல்பாடுகள் உள்ளன. அதில் குறிப்பாக கடந்த மக்களவை தேர்தலில் தருமபுரி மக்களவை தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி டாக்டர் செந்தில்குமார் அவர்களின் செயல்பாடுகள் நாளுக்கு நாள் அரசியல் நாகரீகமற்றதாகவே தொடர்ந்து வருகிறது. தேர்தல் பிரச்சாரத்தின் போது நானும் அன்புமணி ராமதாஸ் அவருடைய சமூகம் தான் என சாதியை வைத்து வாக்கு கேட்ட அவர் வெற்றி பெற்றதும் சாதியை ஒழிக்க போராடுவேன் என தினம் தினம் கூறும் கருத்துக்கள் கேலிக்குள்ளாகி வருகின்றன.

அந்த வகையில் தினம் எதாவது ஒரு சாதி ஒழிப்பு சம்பந்தமான கருத்துக்களை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தருமபுரி எம்பி செந்தில்குமார் பதிவிட்டு வருகிறார். அதில் வழக்கம் போல எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் தங்களுடைய விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும் பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களின் ட்விட்டர் பக்கங்களில் சென்று தருமபுரி எம்பி தன்னுடைய சுய விளம்பரத்திற்காக எதையாவது கமெண்ட் செய்வதையே வழக்கமாக கொண்டுள்ளார்.அதில் குறிப்பாக தற்போது புதிய தமிழகம் கட்சியின் செயல்பாடுகளை விமர்சிக்கும் வகையில் அவர் ட்விட்டரில் பதிவிட்டது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

சில சமூகத்திற்கு எதிராக அரசியல் கட்சி தலைவர்களால் தூண்டப்பட்டு நடத்தப்படும் நாடக காதலை தோலுரிக்கும் விதமாக சமீபத்தில் வெளியான திரௌபதி திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் திராவிடக் கட்சிகளின் கலப்பு திருமண ஆதரவு கொள்கையை விமர்சிக்கும் வகையில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி அவர்களின் மகன் ஷியாம் கிருஷ்ணசாமி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அதில் “Dr கிருஷ்ணசாமி: சாதிகளிடைய ஒற்றுமை முக்கியும், நாம் சமூக, பொருளாதார ரீதியில் முன்னேற வேண்டியுள்ளது, அதனால் தேவேந்திர குல இளைஞர்கள் வேறு சாதி பெண்களே காதலித்தாலும் ஒதுங்கிவிடுங்கள். திராவிடம்: அது எல்லாம் முடியாது சாதிய ஒழிக்கனும். நீ வேற சாதி பெண்ணை தேடி தேடி காதலி. கருமம் ” என திராவிட கட்சிகளை விமர்சித்திருந்தார்.

மேலும் மற்றுமொரு பதிவில் “SC என்பது எங்களுக்கு கறை தான்! பின்ன என்ன பெருமையா? பெருமையா நினைக்கிறவன் அவனவன் பெயருக்கு முன்னாடியோ பின்னாடியோ SC என்று போட்டு அடையாளப்படுத்தி கொள்ளட்டுமே.. எங்களுக்கு சுயமரியாதை இருக்கு. அது உங்களுக்கு RSS சித்தாந்தமா தெரியுது” எனவும் கூறியிருந்தார்.

அடுத்ததாக “கலப்பு திருமணங்கள் நடந்தால் சாதி ஒழிந்துவிடுமாம்- திராவிட புத்தகவாசிகள். நல்ல ஒழியும் பாருங்க.. இரண்டு சாதி கலவரத்தில் முடியும். நடைமுறையை ஒரு காலத்திலும் பேச மாட்டார்கள். சரி திராவிடம் பேசுபவர் குடும்பத்திலாவது செய்கிறார்களா பார்த்தால்

சாதி ஒழிய முதலில் சமூக இணக்கம் வரனும்” என சாதி ஒழிப்பு குறித்த திராவிட கட்சிகளின் செயல்பாடுகளையும் விமர்சனம் செய்திருந்தார்.

இந்நிலையில் பிரபல தனியார் ஊடகத்தில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கலந்து கொண்ட விவாத நிகழ்ச்சியின் வீடியோவை பகிர்ந்து திமுக எம்பி செந்தில்குமார் கிண்டலடிக்கும் விதத்தில் தன்னுடைய கருத்தை தெரிவித்திருந்தார்.

மேலும் SC என்பதுகறை என்றால் @DrShyamKK வரும் 2021 தேர்தலில் உங்கள் கட்சி ரிசர்வ் தொகுதியில் இனி நிற்க மாட்டோம் என்று உறுதிபட கூறமுடியுமா…. இது நாள் வறை பெற்ற உரிமைகள் இனி வேண்டாம் என்று சொல்ல முடியுமா.,பெற்ற படிப்பு/வேலை சலுகைகள் திரும்பப் தருவதற்கு நீங்கள் தயாரா. என திமுக எம்பி ட்விட்டரில் பதிவிட்டு சர்ச்சையை ஆரம்பித்து வைத்துள்ளார்.

மேலும் அவர், “நாங்கள் சொல்வது உரிமை.நீங்களும் உங்கள் தந்தையும் கூறுவது கறை. உங்கள் சமுதாயத்திற்கு @DrShyamKK @DrKrishnasamy பாதுகாவலர்கள் அல்ல. இன்னமும் உரிமை கேட்டு போராடும் மக்கள் சமூகத்தில் உள்ளார்கள். கறை என்று கூறும் நீங்கள் இனி ரிசர்வ் தொகுதியில் நிற்காமட்டோம் என உறுதி அளிக்க முடியுமா? என்றும் மற்றொரு கேள்வியும் கேட்டிருந்தார்.

அதற்கு பதிலளிக்கும் விதத்தில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி அவர்களின் மகன் ஷியாம் கிருஷ்ணசாமி ” திருப்பி தர தயார் என்று எப்பவோ சொல்லிவிட்டோம்… சரி நீங்க வன்னியரே இல்லாத தொகுதியில் போட்டியிட தயாரா? அ.ராசாவுக்கு சொந்த தொகுதி குடுக்கவில்லை? கனிமொழி,நாடார் சாதி பாசத்தில் தான தூத்துக்குடியில் நின்றார்? திமுக இனி சாதி பார்க்காமல் வேட்பாளரை நிறுத்தும் என உறுதி அளிக்க முடியுமா? என்று அவரிடம் கேள்வியெழுப்பினார்.

மேலும் அவர் “சாதி ஒழிய கலப்பு திருமணம் செய்யச் சொல்லி ஊருக்கு உபதேசம் செய்யும் திமுக MPக்கள் சொந்த குடும்பத்தில் எத்தனை கலப்பு திருமணங்கள் என்று சொல்ல தயங்குவது ஏன்?! அந்த சமூக பொருப்பு உங்களுக்கு ஏன் இல்லாம போச்சு? மத்தவன் அடிச்சுகிட்டு சாவனும்.. நீங்க சொந்த சாதியிலேயே வசதியா இருப்பீங்க! என பதிலுக்கு விமர்சனம் செய்திருந்தார்.

மேலும் அவர் திமுக எம்பி செந்தில்குமாரிடம் “உங்க மனைவி எந்த சாதி? உங்க குடும்பத்தில் எத்தனை பேர் கலப்பு திருமணம்? ஏன் உங்க குடும்பத்தில் எல்லோரும் கலப்பு திருமணம் செய்து சாதியை ஒழிக்க முயிற்சி செய்திருக்கலாமே? ” எனவும் கேள்வியெழுப்பிருந்தார் .

மேலும் “நேற்று திமுகவிற்கு வந்த @DrSenthil_MDRD உங்களுக்கு சொந்த தொகுதியான தர்மபுரியில் வாய்ப்பு, மூன்னாள் மத்திய அமைச்சர் அ.ராசா ஏன் சொந்த பெரம்பலூர் தொகுதி பொது தொகுதியானவுடன் மறுக்கப்பட்டு, நீலகிரிக்கு மாற்றப்பட்டார்? மூன்று முறை வென்ற தொகுதி கூட பொது தொகுதியில் போட்டியிட தடையா?” என்றும் அவர் கேள்வியெழுப்பியிருந்தார்.

இவ்வாறு இருவருக்குமிடையே ட்விட்டரில் காரசாரமான விவாதங்கள் சென்று கொண்டிருந்த வேளையில் இதிலிருந்து நழுவும் விதமாக திடீரென திமுக எம்பி செந்தில்குமார் “நடுநிலையாளர் ஒருவருடன் பொதுவிவாதத்துக்கு தயார்” என்றார்..

இதற்கு பதிலளித்த ஷ்யாம், “நான் விவாதிக்க தயார்.. ஸ்டாலின் அல்லது உதயநிதியிடம் கேட்டு சொல்லுங்க MP sir.. Slightly smiling face அவர்கள் One on Oneக்கு தயார் என்றால் நாங்களே செலவு ஏற்பாடு எல்லாம் பார்த்து கொள்கிறோம். உங்க Sun TV, Kalaingar TV, Puthiya Thalaimurai Tv எதுவாக இருந்தாலும் எனக்கு ஓகே தான். are they ready” என்று பதிலளித்திருந்தார்.

மேலும், “திமுக MP சார் @DrSenthil_MDRD உங்க வால் ஆட்டுதலை வட மாவட்ட மருத்துவரோடு வச்சுக்கோங்க ?இங்க ஒட்ட நறுக்கப்படும் கேட்ட ஒரு கேள்விக்கு கூட பதில் தராமல் அடுத்த விமர்சனத்துக்கு போகலாமா? விவாதத்தை துவங்கியது நீங்கள், நான் கேள்விக்கு பதிலும் குடுத்துவிட்டேன்.. உங்கள காணவில்லையே…” என்று ஷ்யாம் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் .

author avatar
Ammasi Manickam