ரயிலில் தாக்குதல் நடத்தினால் நல்ல காலம் பிறக்கும் – ஷாருக் சைஃபி பரபரப்பு வாக்குமூலம்

0
151
#image_title

ரயிலில் தாக்குதல் நடத்தினால் நல்ல காலம் பிறக்கும் – ஷாருக் சைஃபி பரபரப்பு வாக்குமூலம்

ரயிலில் தாக்குதல் நடத்தினால் நல்ல காலம் பிறக்கும் என மற்றொருவரின் அறிவுரையை தொடர்ந்து இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக ஷாருக் சைஃபி வாக்குமூலம் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாபெரும் கோழிக்கோடு அருகே எலத்தூரில் ரயிலில் பயணிகளை தீ வைத்து தாக்கியதாக இரண்டு நாட்களாக தேடப்பட்டு வந்த டெல்லி அருகே நொய்டா பகுதியில் சேர்ந்த மகாராஷ்டிரா மாநிலம் ரத்தினகிரியில் கைது செய்யப்பட்டார்.

அங்கிருந்து கேரளாவிற்கு அழைத்து வரப்பட்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், வேறொருவரின் அறிவுரையால் தான் இந்த குற்றத்தை செய்ய தூண்டியதாகவும் ரயிலில் தாக்குதலில் ஈடுபட்டால் நல்லது நடக்கும் என யாரோ அறிவுரை கூறியதால் தாக்குதல் நடத்தப்பட்டதாக போலீசாரிடம் தெரிவித்தார்.

டெல்லியில் இருந்து மும்பைக்கு தனது நண்பருடன் சென்றதாக ஷாருக் சைஃபி போலீசாரிடம் தெரிவித்த அவர், பயணத்தின் போது அந்த நபரை சந்தித்ததாகவும் கோழிக்கோடுக்கு பொது பெட்டியில் பயணித்ததாகவும் எந்த ஸ்டேஷனில் இறங்கினேன் என்று தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.

ரயிலிலிருந்து இறங்கியதும் பெட்ரோல் பம்புக்கு சென்று மூன்று பாட்டில் பெட்ரோல் வாங்கிய பின் அடுத்த ரயிலில் ஏறி தாக்குதலில் ஈடுபட்டதாகவும் பெட்ரோலை ஊற்றிய பின், தான் வைத்திருந்த லைட்டரால் தீ வைத்து எரித்ததாக கூறியுள்ளார்.

மேலும், தாக்குதலுக்குப் பிறகு, தம்பவம் நடைபெற்ற பெட்டியிலிருந்து இரண்டு பெட்டிகள் தாண்டி சென்று மீண்டும் ரயிலில் அமர்ந்து கொண்டதாகவும் அந்த ரயிலிலேயே கண்ணூருக்கு சென்றதாகவும் கூறியுள்ளார்.

பின்னர், அஜ்மீர் செல்ல முயற்சி திட்டமிட்ட நிலையில், மறுநாள் மகாராஷ்டிராவை அடைந்ததாக ஷாருக் சைஃபி கூறியுள்ளார். ரத்தினகிரி ரயில் நிலையத்தை அடைந்தபோது, ​​ரயிலில் இருந்து தவறி விழுந்த அவரை உள்ளூர்வாசிகளால் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றதாகவும் கூறியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான விசாரணைக்காக அமைக்கப்பட்டுள்ள தனிப்படையின் தலைவரான கேரளா காவல்துறையின் குற்ற பிரிவு ஏடிஜிபி அஜித் குமார் தலைமையிலான அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். விசாரணைக்கு பின்பு மதியத்திற்கு மேல் ஷாருக் செய்வியை கோழிக்கோடு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
Savitha